அன்னை பூபதியின்30ஆண்டு நினைவு தினம் த.தே.ம.முன்னனியின் தலைமை அலுவலகத்தில் நிகழ்வு!

19.04.1988ம் ஆண்டு.மட்டக்களப்பு மாமங்கேஸ்வரர்பிள்ளையார் ஆலயமுன்றலில் உண்ணநோன்பிருந்து தியாகசயசாவு ஆடைந்த அன்னை பூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம்.தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியின் தலைமை அலுவலகத்தில் 19,04,2018 மாலை 4.30. மணிக்கு தமிழ் த.தே.ம.முன்னனியின் நல்லுர் பிரதேசபை உறுப்பினரும் ஆசிரியருமான.திருமதி வாசுகி சுதாகரன் தலைமையில் இடம்பெற்றது .

பொதுச்சுடரினை அன்னை பூபதியின் பேத்தியாகிய கோணேஸ்வரி ஏற்றிவைத்தார் மலர்மாலையினை த.தே.ம.முன்னனி தலைவர் கஜேந்திரகுமார் செயலாளர் கஜேந்திரன் அன்னையின் பேத்தி கோணேஸ்வரி த.தே.ம.முன்னனியின் தேசிய அமைப்பாளரும் யாழ்மாநகர சபையின் எதிர்கட்சி தலைவருமான சட்டத்தரணி மணிவண்ணன் ஆகியோர் அணிவித்தனர் அதனைத்தொடர்ந்து மலர் அஞ்சலியும் நினைவுரைகளும் இடம்பெற்று த.தே.ம.முன்னனியின் கல்விக்கழகப்பொறுப்பாளர் சத்தியசீலனின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.