மே 7 ஆம் திகதி தனியாருக்கு விடுமுறை வழங்க வேண்டும்!

மே மாதம் 7 ஆம் திகதி விடுமுறை தினத்தை, தனியாருக்கும் வழங்க வேண்டும் என தொழில் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

தொழிலாளர் தினம் கொண்டாடப்படவுள்ள மே 7 ஆம் திகதியில், தனியார் துறையினருக்கு விடுமுறையை வழங்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ விமலவீர கூறியுள்ளார்.

கடை மற்றும் அலுவலக ஊழியர் சட்டத்தின் பிரகாரம், தனியார் ஊழியர்களுக்கு மே தினத்தில் விடுமுறை வழங்கப்படுதல் வேண்டும்.

மே தினம் கொண்டாடப்படும் நாளில் விடுமுறை வழங்கப்பட வேண்டியது கட்டாயம் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் மே தினம் கொண்டாடப்படும் திகதி குறிப்பிடப்படாததால், இம்முறை மே தினம் கொண்டாடப்படும் 7 ஆம் திகதி தனியாருக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெசாக் வாரத்தினை முன்னிட்டு, தொழிலாளர் தினத்தை 7 ஆம் திகதி கொண்டாடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.