மே மாதம் முதலாம் திகதி கூட்­ட­மைப்பின் கிழக்கு மாகாண மேதினக்கூட்டம்!


தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஏற்­பாடு செய்­துள்ள  கிழக்கு  மாகா­ணத்­திற்­கான மேதினக் கூட்­டமும், தொழி­லாளர் பண்­பாட்டுப் பேர­ணியும்  எதிர்­வரும் மே மாதம் முதலாம் திகதி  செவ்­வாய்க்­கி­ழமை பிற்­பகல்  இரண்டு மணிக்கு  வெல்­லா­வெ­ளியில் இடம் பெற­வுள்­ளது.  போர­தீ­வுப்­பற்று பிர­தேச  சபையின் தவி­சாளர், யோ.ரஜனி தலை­மையில்  தொழி­லாளர் தின நிகழ்வு இடம் பெற­வுள்­ளது.  முன்­ன­தாக  தொழி­லாளர் பண்­பாட்டுப் பவனி  போர­தீ­வுப்­பற்று  பிர­தே­ச­சபை  அமைந்­துள்ள வெல்­லா­வெளி  சந்­தி­யி­லி­ருந்து ஆரம்­ப­மாகி, மே தினப் பொதுக்­கூட்டம்  இடம்பெற­வுள்ள வெல்­லா­வெளி பொது  விளை­யாட்டு மைதா­னத்தை சென்­ற­டை­ய­வுள்­ளது. 

இதனைத்  தொடர்ந்து  இடம் பெறும்  மேதினக் கூட்­டத்தில், இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் பொதுச் செய­லாளர் கி.துரை­ரா­ஜ­சிங்கம்  மேதின அறிக்கை  வெளிப்­ப­கர்­வினை வெளிப்­ப­டுத்­த­வுள்ளார். 
இந்த மே தினக்­கூட்­டத்தில்,  மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, திரு­கோ­ண­மலை மாவட்­டங்­களைச் சேர்ந்த தமிழ்த் தேசியப் பற்­றா­ளர்கள் ஒன்று  கூடி, இலங்கைத்  திரு­நாட்டின் பன்­முகத் தன்­மையை உரத்துச் சொல்லி  வலி­யு­றுத்­துதல், தமிழ்த் தேசி­யத்தின் நியா­யங்­க­ளுக்கு  வலுச்­சேர்த்தல், கூட்­டாட்­சியை கொலு­வேற்றும் உரிய  அர­சியல்  அமைப்பின், உரு­வாக்­கத்தை  முன் நகர்த்­து­மாறு அழுத்தம்  கொடுத்தல்,  நில மீட்பு, தமிழ் அர­சியல் கைதி­களின்  விடு­தலை, மீள் குடி­யேற்றம்,  காணாமல்  ஆக்­கப்­பட்டோர் தொடர்­பான  கரி­சனை, போர் இடம் பெற்ற காலத்தில் வித­வை­யாக்­கப்­பட்­டோரின் பொருளாதார  மேம்பாடு, இளையோரின்  மேம்பாடு,  வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி  தீர்மானங்களையும் நிறைவேற்றவுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.