இலங்கை அகதிகளுக்காக குரல் கொடுக்க அவுஸ்திரேலிய சமூக செயற்பாட்டாளர்கள்!

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் நிலையை எதிர்நோக்கியுள்ள இலங்கையை சேர்ந்த குடும்பத்திற்காக குரல் கொடுக்க அவுஸ்திரேலிய சமூக செயற்பாட்டாளர்கள் முன்வந்துள்ளனர்.

இலங்கை அகதிகளுக்காக இந்த சமூக செயற்பாட்டாளர்கள் நாளைய தினம் ஹர்கிரேவ்ஸ் ஆர்ப்பாட்டத்தை நடத்த ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் புகலிடம் கோரி அவுஸ்திரேலியா சென்ற இந்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட விசா கடந்த மாதத்துடன் காலாவதியானது.

இதனையடுத்து அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்திருந்தது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.