பூநகரிப் பிரதேசத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை!
கிளிநொச்சி பூநகரிப் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறை தொடர்ந்தும் நிலவுகின்றது . எனவே அந்தக் குறை நிவர்தி செய்யப்படவேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
கிளிநொச்சி பூநகரிப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே பெற்றோர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.
பெற்றோர்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கிளிநொச்சி பிரதி வலய கல்விப்பணிப்பாளர் கருத்துத் தெரிவிக்கும் போது: குறித்த பிரச்சினை தொடர்ந்தும் நிலவி வருகிறது. ஒப்பந்த அடிப்படையிலும், 7 ஆண்டுப் பூர்த்தியிலும் வருகை தந்த ஆசிரியர்கள் தற்போது அவர்க ளின் காலம் முடிவடைந்து வெளியேறிச் செல்கின்றனர்.
அதனைக் கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் அவ்வாறு நாம் கண்டிப்பாக மறித்தால் அவர்களின் மனித உரிமை மீறும் செயலாகிவிடும் இருப்பினும் வேறு இடங்களில் இருந்து வருகை தரும் ஆசிரியர்களை பற்றாக்குறை நிலவும் பகுதிகளுக்கு அனுப்புவதாகத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. அத்தோடு உள்ளக மாற்றங்களுக்கு ஆளாகும் ஆசிரியர்கள் இவ்வாறு குறிப்பிடப்படும் பாடசாலைகளுக்கு தற்போது நியமிக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.
கருத்துகள் இல்லை