பவுலர்களுக்கு தினேஷ் கார்த்திக் வேண்டுகோள்!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.
தோல்விக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘160 முதல் 170 ரன்கள் வரை எடுத்திருந்தால் பாதுகாப்பான ஸ்கோராக இருந்திருக்கும். இந்த ஆட்டத்தில் ஐதராபாத் வேகப்பந்து வீச்சாளர்கள் ‘நக்குல்’ வகை பந்து வீச்சில் (விரல்களை மடக்கிய நிலையில் பந்தை பிடித்து வீசுவது) கலக்கினர். இந்த மாதிரி பந்து வீசுவதை எங்களது பவுலர்கள் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்’ என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.