நானாட்டானிடம் கட்சியின் கோட்பாடுகளுக்கு மீறியமையால் விளக்கம் கோரி கடிதம்!
கட்சியின் கோட்பாடுகளுக்கு மாறாகச் செயற்பட்ட நானாட்டான் பிரதேச சபை உறுப்பினரிடம் விளக்கம் கோரி ஜனநாயக தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் இன்று (வியாழக்கிழமை) கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியமை தொடர்பாக நானாட்டான் பிரதேசசபை உறுப்பினர் அன்ரன் றொஜஸ் ஸ்றலினிடம் விளக்கம் கோரியே குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
‘எமது கட்சியின் தீர்மானத்தை மீறி தலைவர் தெரிவுக்கு போட்டியிட்டுள்ளீர்கள். நாங்கள் எந்தக் கட்சியையும் ஆதரிக்கக் கூடாது என தங்களுக்கு பல முறை வலியுறுத்தியுள்ளோம்.
எனவே எமது அங்கத்தவர்கள் சகல இடங்களிலும் வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை எனும் எமது தீர்மானத்தையும் கட்சியின் கோட்பாட்டுக்கு மாறாக மீறியுள்ளீர்கள்.
ஆகவே ஏன் உங்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து உங்களை உறுப்புரிமையில் இருந்து ஏன் நீக்கக் கூடாது? என்பதற்கு ஏழு நாட்களுக்குள் விளக்கம் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்’ என குறித்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை