மைத்திரி-ரணில் இடையில் இன்று விசேட சந்திப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெறவுள்ளது.

 சட்ட ஒழுங்கு மற்றும் அரச நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார இதனைத் தெரிவித்தார். அமைச்சரவை மாற்றம் மற்றும் புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

 பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு ஆதரவளித்து,தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிச் சென்ற ஆறு அமைச்சர்களுக்கு பதிலாக நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சர்கள் குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.