புதிய இராணுவ நினைவுத்தூபியை நாளை மைத்திரி திறந்து வைப்பார்!

குருணாகல் – பதுளை வீதி அபிவிருத்தி நடவடிக்கையின் போது அகற்றப்பட்ட குருணாகல் இராணுவ நினைவுத்தூபிக்கு பதிலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நினைவுத்தூபியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை திறந்து வைப்பார்.
வடமேல் மாகாண சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ரணவிரு சேவா அதிகார சபை ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் பழைய நினைவுத்தூபி காணப்பட்ட இடத்திலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நினைவுத்தூபியின் நிர்மாணப்பணிகள் இலங்கை இராணுவத்தின் பொறியியல் படையணியினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.