கிருலப்பனையில் தீ விபத்து!

கிருலப்பனையில் அமைந்துள்ள இரு மாடி கட்டடத்தில் இன்று காலை தீ பரவல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து தீயணைப்பு படையினர் தற்போது தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர்.
குறித்த தீ விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிருலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.