யாழ் அச்சுவேலியில் மாட்டுஇறைச்சிக் கடைக்கு தீ வைப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில்  நீர்வேலி  அரசகேசரிப் பிள்ளையார் கோயிலுக்கு செல்லும் வீதிக்கு அருகில் இருந்த மாட்டு இறைச்சிக் கடை நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் இனந்தெரியாத குழு ஒன்றால் தீக்கிரையாக்கப்பட்டது.

இந்தக் கடை வலி.கிழக்கு பிரதேச சபையினரால் நிர்வகிக்கப்படும் நிலையில்  சம்பவம் குறித்து கடை நடத்துபவரால் வலி.கிழக்கு பிரதேச சபையினருக்கு அறிவிக்கப்பட்டதுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ளது.

தீக்கிரையாக்கப்பட்ட கடைக்கு அருகில் இன்னுமொரு மட்டு இறைச்சிக் கடையும் உள்ளது. அதற்கு எந்த சேதமும் ஏற்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, அந்தப் பகுதியிலிருந்த சைக்கிள் கடையொன்று கடந்த வருடம் எரியூட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.