திருகோணமலையில் போசாக்கு விழிப்புணர்வு நிகழ்வு!

போசாக்கு வாரத்தை முன்னிட்டு திருகோணமலை மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள தாய் சேய் பராமரிப்பு நிலையத்தில் போசாக்கு பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு குடும்பநல உத்தியோகத்தர் திருமதி. ஈஸ்வரி யோகேஸ்வரன் தலைமையில் இன்று இடம் பெற்றது.
நிகழ்வில் திருகோணமலை சுகாதார மருத்துவ அதிகாரி உஷாநந்தினி தாய்மாருக்கு போசாக்கு பற்றி விளக்கமளித்தார். பாலர் பாடசாலை சிறார்கள், கர்ப்பிணி தாய்மார்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.