வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கை அரசுக்குரியது- இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்து!!

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கை அரசுக்குரிய விடயம்.
இலங்கை அரசு நடவடிக் கைகளை எடுக்கின்ற அதே வேளை எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் இன்னமும் உள்ளன.
இவ்வாறு இலங் கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் மேலும் தெரிவித்ததாவது: பிரகாசமான எதிர்காலம் என்ற இலங்கையின் கனவை நனவாக்குவதற்கு இலங்கையுடன் கைகோர்த்துப் பயணிப்பதற்கு அமெரிக்கா விரும்புகின்றது.
இலங்கையின் நல்லிணக்க முயற்சிக்கு இலங்கையே தலைமை தாங்கவேண்டும். காயங்களை ஆற்றக்கூடிய, பிரகாசமான எதிர்காலத்துக்கு வழிவகுக்ககூடிய நல்லிணக்க முயற்சியை இலங்கையே முன்னெடுக்க வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது என்று அமெரிக்கா மாத்திரமல்ல இலங்கையும் ஐ.நா செயற்பாடுகள் மூலமாக உறுதி வழங்கியுள்ளது.
இலங்கை வெற்றியடையவேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். இலங்கையுடனான எமது உறவுகள் விரிவாக்கப்படுவதற்காக பெருமளவு முதலிட்டுள்ளோம். இலங்கை அரசு நடவடிக்கைகளை எடுக்கின்ற அதேவேளை இன்னமும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளன.
இலங்கை போருக்குப் பிந்திய காலத்துக்குள் நுழையும் இந்தத் தருணத்தில் ஜனநாயகத்தை பலப்படுத்தும் இந்த வேளையில் வாக்குறுதி அளிக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றும் பொறுப்பு இலங்கையுடையது.
2016 ஆம் ஆண்டு சுதந்திரக்கொண்டாட்டங்களை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பங்கள் கிடைத்த சிலரில் நானும் ஒருவன்.
தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்பட்டவேளை வளர்ந்தவர்கள் கூட கண்ணீர் விடுவதை மாத்திரம் நான் பார்க்கவில்லை, ஐம்பது வருடத்திற்கு பின்னர் அரச நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவதை பார்த்து கண்ணீர் சிந்தப்படுவதையும் நான் பார்த்திருக்கின்றேன்.
இதுவே நல்லிணக்கத்தின் பலம். மிக மோசமான துயரம் மற்றும் மனவேதனைகளுக்குப் பின்னர் காயங்கள் ஆற்றப்படுவதன் பலம் இது- என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.