கடலோர பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல்!

இரு நாடுகளின் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு தரப்பினருக்கு இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து இலங்கை - இந்திய அதிகாரிகள் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கை - இந்திய கடற்படையினக்கு இடையில் வருடாந்தம் இடம்பெறும் 'சர்வதேச கடல் எல்லை மாநாடு' காங்கேசன்துறையில் நேற்று இடம்பெற்றது.

இந்திய கடற்படையில் 11 அதிகாரிகளும், இலங்கை கடற்படையின் 9 அதிகாரிகளும் இதில் பங்கேற்றுள்ளனர்.

சமுத்திர பாதுகாப்பை தொடர்வது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.