மாங்குளத்தில் ஆயுதத்தால் மிரட்டிக் கொள்ளை!

மாங்குளம், ஒட்டுருத்தகுளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில்இன்று அதிகாலை கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

 வான் ஒன்றில் வருகை தந்த இருவர், எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்த ஊழியரை கூரிய ஆயுதம் ஒன்றை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளயடித்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 சுமார் ஒரு இலட்சத்து 86 ஆயிரம் ரூபா பணம் இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.