சாவகச்சேரி விபத்தில் இருவர் படுகாயம்!

சாவகச்சேரி பகுதியில் இன்று (12)  இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்தவர்களான சந்திரகுமார் கஜிபன் (வயது-23) கிருஷ்ணகுமார் நிறுஜன் (வயது- 15) ஆகியோரே படுகாயமடைந்தனர்.
மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.