இரணைத்தீவு மக்கள் சொந்தக் காணிகளில் கொட்டில்கள் அமைத்து குடியேற்றம்!

கிளிநொச்சி – இரணைத்தீவு மக்கள் 366 நாளாக மேற்கொண்ட தொடர் போராட்டத்தையடுத்து நேற்று முதல் தங்களின் காணிகளில் கொட்டில்கள் அமைத்துக் குடியேறி வருகின்றனர்.
30 குடும்பங்களைச் சேர்ந்த மக்களே இவ்வாறு குடியேறி வருவதுடன், தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதற்காகவே இந்த நடிவடிக்கையை மேற்கொண்டதாகக் தெரிவிக்கின்றனர். 
குறித்த மக்கள் தங்களின் காணிகளில் தாங்கள் சுதந்திரமாகக் குடியேறுவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்தே மக்கள் யாழ்ப்பாணத்தில் மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.