மலையக பகுதிகளில் பயிர் செய்யப்படும் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!

மலையக பகுதிகளில் பயிர் செய்யப்படும் மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. தம்புள்ளை பொருளாதார மத்தியநிலையம் இதனை தெரிவித்துள்ளது.

 ஒரு கிலோ கிராம் கெரட், போஞ்சி, கறிமிளகாய், லீக்ஸ் ஆகிய மரக்கறிகள் நேற்றைய தினம் 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 கடும் மழைக்காரணமாக மலையக பகுதி மரக்கறி செய்கையாளர்களின் தோட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன   இதன்காரணமாகவே மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.