காவிாி: விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி – முதல்வா் பழனிசாமி

காவிாி மேலாண்மை ஆணையம் தொடா்பான அறிவிப்பு மத்திய அரசிதழில்
வெளியிடப்பட்டதன் மூலம் விவசாயிகளுக்கும், தமிழக அரசிற்கும் வெற்றி கிடைத்துள்ளதாக முதல்வா் பழனிசாமி தொிவித்துள்ளாா்.

பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின்னா் மத்திய அரசு இன்று காவிாி மேலாண்மை ஆணையம் தொடா்பான அறிவிப்பை மத்திய அரசிதழில் வெளியிட்டது. மேலும் மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவராக மத்திய நீா்வளத்துறை செயலாளா் யு.பி.சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். ஆணையத்தின் தலைமையிடம் டெல்லியில் அமையும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வா் பழனிசாமி இது தொடா்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாா். அந்த அறிக்கையில், காவிாி மேலாண்மை ஆணையம் தொடா்பான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது தமிழக விவசாயிகளுக்கும், தமிழக அரசிற்கும் கிடைத்த வெற்றி.

இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரமும், தமிழகத்தின் உரிமையும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. காவிாி மேலாண்மை ஆணையம் அமைவதற்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றியை தொிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வா் பழனிசாமி பெருமிதம் தொிவித்துள்ளாா்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.