யாழ் பளைப் பிரதேசத்தில் குடியேற்ற நடவடிக்கை!

யாழ் மாவட்டத்தில் காணி இல்லாதவர்களுக்கு கிளிநொச்சி மாவட்டம் பளை பிரதேசத்தில் காணி வழங்கி குடியேற்றும் திட்டமொன்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.


யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று இணைத் தலைவர்கள் தலைமையில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது இத்திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சி. ஸ்ரீதரன் முன்மொழிந்ததுடன், அது தொடர்பில் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“யாழ். மாவட்டம் உட்பட வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் படையினரின் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும். இங்குள்ள மக்களுக்கே காணிகள் இல்லாத நிலையும் இருக்கின்ற போது படையினருக்கு எவ்வாறு காணிகளை வழங்க முடியும்.

யாழில் மட்டும் 14 ஆயிரம் பேருக்கு காணிகள் இல்லை. ஆகவே இவ்வாறு காணிகள் இல்லாதவர்களுக்கு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பளையில் இருக்கின்ற காணிகளை வழங்க முடியும்” எனத் தெரிவித்தார்.

இதேவேளை யாழில் காணிப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு வட.மாகாண சபையும், திணைக்களங்களும் மாங்குளத்திற்கு நகர வேண்டும்.

அவ்வாறு சென்றாலே காணிப் பிரச்சனையைத் தீர்க்க முடியுமென விவசாய அமைச்சர் சிவநேசன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.