பெண்ணொருவரிடம் விமானத்தில் பாலியல் சேட்டை இளைஞன் கைது!

விமானத்திற்குள் வைத்து பிரித்தானிய நாட்டு பெண்ணொருவரிடம் பாலியல்
சேட்டையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கட்டாரிலிருந்து இலங்கைக்கு வந்த விமானமொன்றில் பயணித்த கொழும்பு மோதரை பகுதியை சேர்ந்த 30 வயது இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று அவர் புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 8ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.