புளொட் மாவையை முதலமைச்சர்ராக்குமாம்!
வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் மாவை சேனாதிராசாவை முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்க முடிவெடுக்கப் பட்டால் அதற்கு புளொட் முழு ஆதரவையும் வழங்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுள் ஒன்றான புளொட்டின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
முதலமைச்சர் வேட்பாளராக்கு யார் பொருத்தமானவர் என்று கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளும் கூடி ஆராய்ந்து முடிவெடுக்கும் சந்தர்ப்பத்தில், மாவை சோனாதிராசாவை வேட்பாளராகக் கூட்டமைப்பு முன்னிலைப்படுத்தினால் அதற்கு முழு ஆதரவைப் புளொட் கட்சி வழங்கும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் கூட்டமைப்புக்குள் எந்தப் பிளவும் ஏற்படக்கூடாது. பிளவு ஏற்படுமாயின் அது தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பிறிதொரு கட்சியில் சி.வி. விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவாராயின் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, மக்களின் நன்மை கருதி அனைவரும் தங்களது சுயநலத்தைப் புறந்தள்ளி ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும்.
வடக்கு, கிழக்கில் நிகழ்த்தப்படும் பௌத்தமயமாக்கலைத் தடுப்பதற்கு மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டும். ஆனால் , இன்றைய தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்குத் தயார் இல்லை. 70 வருட இனப்பிரச்சினையை ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் தீர்த்து வைக்க முடியாது. எனவே, இன்றை கூட்டாட்சியிலும் தமிழர்களுக்குத் தீர்வு கிட்டுமா என்பது சந்தேகம் தான் என்றார்.
முதலமைச்சர் வேட்பாளராக்கு யார் பொருத்தமானவர் என்று கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளும் கூடி ஆராய்ந்து முடிவெடுக்கும் சந்தர்ப்பத்தில், மாவை சோனாதிராசாவை வேட்பாளராகக் கூட்டமைப்பு முன்னிலைப்படுத்தினால் அதற்கு முழு ஆதரவைப் புளொட் கட்சி வழங்கும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் கூட்டமைப்புக்குள் எந்தப் பிளவும் ஏற்படக்கூடாது. பிளவு ஏற்படுமாயின் அது தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பிறிதொரு கட்சியில் சி.வி. விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவாராயின் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, மக்களின் நன்மை கருதி அனைவரும் தங்களது சுயநலத்தைப் புறந்தள்ளி ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும்.
வடக்கு, கிழக்கில் நிகழ்த்தப்படும் பௌத்தமயமாக்கலைத் தடுப்பதற்கு மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டும். ஆனால் , இன்றைய தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்குத் தயார் இல்லை. 70 வருட இனப்பிரச்சினையை ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் தீர்த்து வைக்க முடியாது. எனவே, இன்றை கூட்டாட்சியிலும் தமிழர்களுக்குத் தீர்வு கிட்டுமா என்பது சந்தேகம் தான் என்றார்.
கருத்துகள் இல்லை