இலங்கையில் ஆயுர்வேத வைத்தியம் கற்க்கும் வெளிநாட்டவர்கள்!

இலங்கையில் ஆயுர்வேத மருத்துவம் மிகப்பெரிய சொத்தாக கருதப்படுகின்ற நிலையில் அது சர்வதேசம் வரை பிரபல்யம் அடைந்துள்ளது.

உலகின் பிரபலங்கள், விஞ்ஞானிகள் உட்பட பலர் இந்த ஆயுர்வேத மருத்துவத்தை ஆய்வு செய்வதற்காக இலங்கைக்கு வருவதற்கு தயாராகியுள்ளனர்.

ஹொரிவில ஆயுர்வேத வைத்தியம் தொடர்பில் கற்பதற்காக உலகை வியக்க வைத்த பிரித்தானிய நாட்டு வைத்தியர்கள் சிலர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

பரம்பரை ஹொரிவில ஆயுர்வேத வைத்தியரான வைத்தியர் செனவிரத்னவிடம், பிரித்தானிய வைத்தியர்கள் ஆயுர்வேத வைத்தியத்தை கற்று வருகின்றனர்.

மூலிகை பொருட்களை கொண்டு எப்படி எல்லாம் சிகிச்சை மேற்கொள்வது என்பது குறித்தும் அவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்கள் இலங்கையில் தங்கியிருந்து இதனை கற்று வருகின்றனர்.

வைத்தியசாலை வைத்தியர்களால் முடியாது என கைவிட்டவர்கள், நாள்பட்ட நோய்கள், தீர்க்க முடியாதென தவிர்க்க அனைத்து விதமான நோயாளிகளுக்கும் ஆயுர்வேத சிசிக்சை அளித்து, அவர்களை முற்றாக நோயிலிருந்து விடுவிக்கும் அபூர்வ சக்தி படைத்தவராக செனவிரத்ன காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.