யாழ் கடற் கரையில் இடம் பெறும் அனாகரீகச் செயற்பாடுகளில்!
அரசியல் விடுதலைக்காக 30 ஆண்டுகள் காலமாக ஆயுதம் ஏந்திப் போராடிய நாம், இன்று எமது கலாசாரத்தைக் கட்டிக் காக்கவும், பேணவும், தக்கவைக்கவும் அன்றாடம் போராட வேண்டியவர்களாக இருக்கிறோம்.
அதிலும் எம்மவர்களில் இருந்து, எமது இளைஞர்களின் கட்டுக்குள் அடங்காத போக்குகளில் இருந்து கலாசாரத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளமை பெருந்துயர்.
அவ்வாறாக எமது கலாசாரம், பண்பாடுகள், விழுமியங்கள் என்பன வெட்டிச் சரிக்கப்படும் இடங்களின் ஒன்றுதான் இந்தத் தல்செவென கடற்கரை.
அமைதி தேடிச் செல்தலும் கொதித்துப்போய் வருதலும்
வேலைப்பளு, அழுத்தம், பரபரப்பு, பதற்றம் இவற்றை ஓரளவேனும் தம்மிடத்தில் இருந்து தொலைத்துவிட வேண்டும் என்று பலரும் தெரிவுசெய்யும் ஓர் இடமாகத் தல்செவன கடற்கரை அமைந்துள்ளது.
ஆனால் காதல் என்னும் போர்வைக்குள் இளையோர்கள் அங்கு மேற்கொள்ளும் காம வெறியாட்டங்களை சகிக்க முடியவில்லை.
எனினும் பொழுதுபோக்க வந்திருந்து எல்லைமீறாமல் தமக்கிடையே வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்ளும் காதலர்களும் இருக்கிறார்கள்தான். அவர்கள் இந்தப் பட்டியலில் விதி விலக்கானவர்கள்.
காதலர்கள் என்றால் வெளியிடங்களுக்குத் தனியாகச் செல்லத்தான் செய்வார்கள். அதற்காகக் காதல் என்பதன் புனிதம் அற்று போகும் வகையில் அனாகரீகச் செயற்பாடுகளில் ஈடுபடுவதை எங்கணம் நோக்குவது…?
நீங்கள் பேசவேண்டியவற்றை தனியாகத்தான் இருந்து பேசவேண்டுமா? பேசுங்கள், மனம்விட்டு பேசுங்கள், உங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளை பேசித்தீருங்கள், மனதில் இருப்பவற்றை பரிமாறுங்கள்.
இவற்றுக்கு எதற்கு மறைவான பிரதேசங்க ளும், பற்றைகளும், பாறைகளும், பொந்துகளும்….??? ஒருவேளை ஏதேனும் ஆய்வுகளில் ஈடுபடுகிறார்களோ! யாம் அறியோம் பராபரமே.
அனுபவம்
ஓர் உண்மைச் சம்பவம். இளைஞர்களாக ஒன்றுசேர்ந்து பொழுதுபோக்குவதற்காக காங்கேசன்துறை தல்செவென கடற்கரைக்குச் சென்றிருந்தோம்.
சரி நாங்கள் ஓரிடத்தில் இருந்து அரட்டை அடிப்போம் என்று கடற்கரையின் ஒருபகுதிக்குச் சென்றிருந்தோம்.
அங்கு பார்த்தால் ஓரிரு காதல் ஜோடிகள் அமைதியான முறையில் தமக்கிடையில் கருத்துகளை பரிமாறிக்கொண்டிருந்தனர்.
சரி நாம் ஏன் அவர்களை தொந்தரவு செய்வேண்டும் என எண்ணி, கடற்கரையின் இறுதிப் பகுதிக்குச் சென்றோம். அங்கு உடைந்த பழைய தடுப்பணைகளும், பாறைகளும் சூழ்ந்து கற்களாக காணப்பட்டது.
எட்டிப்பார்போம் என பார்த்தால் ஒவ்வொரு கற்களின் இடைவெளியிலும், பொந்துகளிலும் ஒவ்வொரு ஜோடிகள்.
இந்தப் பத்தியில் முன்னர் குறிப்பிட்டது போல ஏதேனும் ஆய்வாகக்கூட இருக்கலாம். கேட்டால் காதலர்களாம்.
நல்லவேளையாக இந்திய வீட்டுத்திட்டக் குழு இந்தக் காட்சிகளைப் பார்கவில்லை. பார்த்திருந்தால், குடித்தனம் நடத்துவதற்கு ஏன் பத்து, பதினைந்து லட்சம் பெறுமதியான வீடுகள் சிறு குகைகளே போதுமே என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.
நாங்கள், என்ன இதுவென்று சலித்துப் போயிருக்க இன்னொரு இளைஞர் குழுவொன்று அங்கு வந்தது.
அவ்வாறு ஒழிந்திருந்தவர்களையும் பதுங்கியிருந்தவர்களையும் தேடித்தேடிப் பிடித்து விரட்டினார்கள். ‘‘நீங்கள் துரத்தினால் துரத்துங்கள் எங்களுக்கு இந்த இடம் இல்லையென்றால் வேறு இடம் கிடைக்காமலா போய்விடும்.
அங்கிருந்து நாம் ஆய்வைத் தொடருவோம்’’ என்று சொல்லாமல் சொல்லியபடி அவர்கள் நகர்ந்தார்கள். சில பெண்கள் ‘‘விபசார வழக்கில் சிக்கிக்கொண்ட பெண்களைப் போன்று’’ துப்பாட்டாவால் தமது திருமுகங்களை மூடிக்கொண்டனர்.
கட்டுப்படுத்த நடவடிக்கை
இத்தகைய கலாசார சீரழிவு களைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் அவசியம். இதற்கான இரண்டு திட்டங்கள் மனதில் ஆழ ஊடுருவுகின்றன.
ஒன்று, இதற்காகவே சில இடங்களை அமைத்துக் கொடுப்பது. ஆம், மேற்கத்திய நாடுகள் இதுபோன்ற நடவடிக்கைகளை ‘தனிப்பட்ட சுதந்திரம்’ என்ற வரையறைக்குள் வைத்துள்ளன. ஒரு விதத்தில் அது சரியானதும் கூட. இதனால் அத்தகைய நாடுகளில் காதலர்கள் செல்வதற்கு என்று ஏராளமான இடங்கள் உள்ளன.
இங்கு அவ்வாறான இடங்களை அமைத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டால் கண்ட இடங்களிலும் இவ்வாறு கலாசாரம் சிக்கிக் சின்னா பின்ன மாகாது.
இரண்டாவது, திருடர்களைப் பிடிக்க விழிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டதைப் போன்று, இந்தக் கலாசாரத் திருடர்க ளையும் பிடிப்பதற்கு சில குழுக்களை நிறுவி தல்செவன, கசூரினா, கோட்டை என்று இவ்வாறான சம்பவங்கள் அவதானிக்கப்படும் இடங்களில் நிறுத்துவது.
எனினும், தனிமனித மனங்களில் ஏற்படும் மாற்றமே அனைத்தையும் விட மேலானது.
அதிலும் எம்மவர்களில் இருந்து, எமது இளைஞர்களின் கட்டுக்குள் அடங்காத போக்குகளில் இருந்து கலாசாரத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளமை பெருந்துயர்.
அவ்வாறாக எமது கலாசாரம், பண்பாடுகள், விழுமியங்கள் என்பன வெட்டிச் சரிக்கப்படும் இடங்களின் ஒன்றுதான் இந்தத் தல்செவென கடற்கரை.
அமைதி தேடிச் செல்தலும் கொதித்துப்போய் வருதலும்
வேலைப்பளு, அழுத்தம், பரபரப்பு, பதற்றம் இவற்றை ஓரளவேனும் தம்மிடத்தில் இருந்து தொலைத்துவிட வேண்டும் என்று பலரும் தெரிவுசெய்யும் ஓர் இடமாகத் தல்செவன கடற்கரை அமைந்துள்ளது.
ஆனால் காதல் என்னும் போர்வைக்குள் இளையோர்கள் அங்கு மேற்கொள்ளும் காம வெறியாட்டங்களை சகிக்க முடியவில்லை.
எனினும் பொழுதுபோக்க வந்திருந்து எல்லைமீறாமல் தமக்கிடையே வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்ளும் காதலர்களும் இருக்கிறார்கள்தான். அவர்கள் இந்தப் பட்டியலில் விதி விலக்கானவர்கள்.
காதலர்கள் என்றால் வெளியிடங்களுக்குத் தனியாகச் செல்லத்தான் செய்வார்கள். அதற்காகக் காதல் என்பதன் புனிதம் அற்று போகும் வகையில் அனாகரீகச் செயற்பாடுகளில் ஈடுபடுவதை எங்கணம் நோக்குவது…?
நீங்கள் பேசவேண்டியவற்றை தனியாகத்தான் இருந்து பேசவேண்டுமா? பேசுங்கள், மனம்விட்டு பேசுங்கள், உங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளை பேசித்தீருங்கள், மனதில் இருப்பவற்றை பரிமாறுங்கள்.
இவற்றுக்கு எதற்கு மறைவான பிரதேசங்க ளும், பற்றைகளும், பாறைகளும், பொந்துகளும்….??? ஒருவேளை ஏதேனும் ஆய்வுகளில் ஈடுபடுகிறார்களோ! யாம் அறியோம் பராபரமே.
அனுபவம்
ஓர் உண்மைச் சம்பவம். இளைஞர்களாக ஒன்றுசேர்ந்து பொழுதுபோக்குவதற்காக காங்கேசன்துறை தல்செவென கடற்கரைக்குச் சென்றிருந்தோம்.
சரி நாங்கள் ஓரிடத்தில் இருந்து அரட்டை அடிப்போம் என்று கடற்கரையின் ஒருபகுதிக்குச் சென்றிருந்தோம்.
அங்கு பார்த்தால் ஓரிரு காதல் ஜோடிகள் அமைதியான முறையில் தமக்கிடையில் கருத்துகளை பரிமாறிக்கொண்டிருந்தனர்.
சரி நாம் ஏன் அவர்களை தொந்தரவு செய்வேண்டும் என எண்ணி, கடற்கரையின் இறுதிப் பகுதிக்குச் சென்றோம். அங்கு உடைந்த பழைய தடுப்பணைகளும், பாறைகளும் சூழ்ந்து கற்களாக காணப்பட்டது.
எட்டிப்பார்போம் என பார்த்தால் ஒவ்வொரு கற்களின் இடைவெளியிலும், பொந்துகளிலும் ஒவ்வொரு ஜோடிகள்.
இந்தப் பத்தியில் முன்னர் குறிப்பிட்டது போல ஏதேனும் ஆய்வாகக்கூட இருக்கலாம். கேட்டால் காதலர்களாம்.
நல்லவேளையாக இந்திய வீட்டுத்திட்டக் குழு இந்தக் காட்சிகளைப் பார்கவில்லை. பார்த்திருந்தால், குடித்தனம் நடத்துவதற்கு ஏன் பத்து, பதினைந்து லட்சம் பெறுமதியான வீடுகள் சிறு குகைகளே போதுமே என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.
நாங்கள், என்ன இதுவென்று சலித்துப் போயிருக்க இன்னொரு இளைஞர் குழுவொன்று அங்கு வந்தது.
அவ்வாறு ஒழிந்திருந்தவர்களையும் பதுங்கியிருந்தவர்களையும் தேடித்தேடிப் பிடித்து விரட்டினார்கள். ‘‘நீங்கள் துரத்தினால் துரத்துங்கள் எங்களுக்கு இந்த இடம் இல்லையென்றால் வேறு இடம் கிடைக்காமலா போய்விடும்.
அங்கிருந்து நாம் ஆய்வைத் தொடருவோம்’’ என்று சொல்லாமல் சொல்லியபடி அவர்கள் நகர்ந்தார்கள். சில பெண்கள் ‘‘விபசார வழக்கில் சிக்கிக்கொண்ட பெண்களைப் போன்று’’ துப்பாட்டாவால் தமது திருமுகங்களை மூடிக்கொண்டனர்.
கட்டுப்படுத்த நடவடிக்கை
இத்தகைய கலாசார சீரழிவு களைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் அவசியம். இதற்கான இரண்டு திட்டங்கள் மனதில் ஆழ ஊடுருவுகின்றன.
ஒன்று, இதற்காகவே சில இடங்களை அமைத்துக் கொடுப்பது. ஆம், மேற்கத்திய நாடுகள் இதுபோன்ற நடவடிக்கைகளை ‘தனிப்பட்ட சுதந்திரம்’ என்ற வரையறைக்குள் வைத்துள்ளன. ஒரு விதத்தில் அது சரியானதும் கூட. இதனால் அத்தகைய நாடுகளில் காதலர்கள் செல்வதற்கு என்று ஏராளமான இடங்கள் உள்ளன.
இங்கு அவ்வாறான இடங்களை அமைத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டால் கண்ட இடங்களிலும் இவ்வாறு கலாசாரம் சிக்கிக் சின்னா பின்ன மாகாது.
இரண்டாவது, திருடர்களைப் பிடிக்க விழிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டதைப் போன்று, இந்தக் கலாசாரத் திருடர்க ளையும் பிடிப்பதற்கு சில குழுக்களை நிறுவி தல்செவன, கசூரினா, கோட்டை என்று இவ்வாறான சம்பவங்கள் அவதானிக்கப்படும் இடங்களில் நிறுத்துவது.
எனினும், தனிமனித மனங்களில் ஏற்படும் மாற்றமே அனைத்தையும் விட மேலானது.
கருத்துகள் இல்லை