வடக்கில் இருந்து வெளியேறப்போகும்அச்சத்தில் யாழ்ப்பாணம் மக்கள்!!

யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று மூன்று இடங்­க­ளில் வீடு­க­ளின் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

முகங்­களை மூடி­ம­றைத்­த­ வாறு, இலக்­கத் தக­டு­களை மறைத்து உந்­து­ரு­ளி­க­ளில் வந்த குழுக்­கள் தாக்­கு­தல்­களை சில நிமிட நேரங்­க­ளில் நடத்­திச் சென்­றுள்­ள­தா­கப் பொலிஸார்­ தெரி­வித்­த­னர்.

வாள்­வெட்­டுக் குழு உறுப்­பி­னர் என தாம் சந்­தே­கிக்­கும் ஒரு­வ­ரது உற­வி­ன­ரின் வீட்­டின் மீதும் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் குறிப்­பிட்­ட­னர்.

இந்­தத் தாக்­கு­தல் சம்­ப­வங்­கள் 4 உந்­து­ரு­ளி­க­ளில் சென்ற 8 பேர் குழு­வி­னால் நேற்று இரவு 7 மணிக்­கும் 7.30 மணிக்­கும் இடைப்­பட்ட நேரத்­தில் நடத்­தப்­பட்­டுள்­ளது.

தாக்­கு­த­லா­ளி­கள் தங்­கள் முகத்தை மறைத்­தி­ருந்­த­னர். தலைக் கவ­சம் மற்­றும் கறுத்த மழை அங்கி அணிந்­தி­ருந்­த­னர்.கொக்­கு­வில் பிரம்­படி ஒழுங்கை, கொக்­கு­வில் ஞான­பண்­டிதா பாட­சா­லைக்கு அரு­கி­லுள்ள புத­வீதி, ஆனைக்­கோட்டை ஆகிய பகு­தி­க­ளி­லுள்ள வீடு­க­ளின் மீதே தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது. வீட்­டின் கண்­ணா­டி­களை அடித்து நொருக்­கி­னர்.

வீட்­டி­னுள் புகுந்து தொலைக்­காட்சி, குளிர்­சா­த­னப் பெட்டி உள்­ளிட்ட வீட்­டுத் தள­பா­டங்­க­ளை­யும் சேத­மாக்­கி­யுள்­ள­னர்.

யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த சில வாரங்­க­ளாக முகத்தை மூடி வாள்­க­ளு­டன் செல்­லும் குழுக்­க­ளால் வீடு­கள் தாக்­கப்­பட்டு வரு­கின்­றது. வர்த்­தக நிலை­யங்­கள் தாக்­கப்­ப­டு­கின்­றன.

வர்த்­தக நிலைய உரி­மை­யா­ளர்­கள் அச்­சு­றுத்­தப்­பட்டு பணம் கொள்­ளை­ய­டிக்­கப்­ப­டு­கின்­றது. தொடர்ந்து இடம்­பெ­றும் இந்­தச் சம்­ப­வத்­தால் மக்­கள் அச்­சத்­தில் உறைந்­துள்­ள­னர்.

வடக்கு வன்­மு­றை­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்­பில் சட்­டம் ஒழுங்கு அமைச்­சர், பொலிஸ்மா அதி­பர் யாழ்ப்­பா­ணத்­திற்கு வந்து சென்ற பின்­ன­ரும் அவை தொடர்ந்­தும் அதி­க­ரித்­துச் செல்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதனால் மனமுடைந்துள்ள பல குடும்பங்கள் வடக்கில் இருந்து வெளியேறும் மனநிலையில் இருப்பதாக யாழ்ப்­பா­ண செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.