மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி நகைச்சுவை!

தான் கூறிய கருத்தை தயவுசெய்து பத்திரிகையில் போட்டுவிடாதீர்கள் என்று மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.



இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான மராத்தி திரைப்படம் சாய்ராத். ஆணவக் கொலையை மையமாக வைத்து அழகான காதலுடன், எப்போது கேட்டாலும் சலிக்காத பாடலுடன் அமைந்திருந்தது அப்படம். சிறிய முதலீட்டில் அதிக லாபம் ஈட்டிய சாய்ராத், கன்னடத்தில் ரீமேக் ஆனது. அதன் தொடர்ச்சியாக இந்தியிலும் ‘தடக்’ என்ற பெயரில் உருவாகிவருகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் இஷான் கட்டாரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சஷாங் கைத்தான் இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் வரும் 20ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தை பிரபலம் ஆக்கும் வகையில் மும்பையில் நேற்று (ஜூலை 15) ஒரு நிகழ்ச்சி நடந்தது.

இவ்விழாவில் ஜான்வியும் இஷானும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் “உங்கள் இருவரில் யாரால் இந்தியப் பிரதமர் ஆக முடியும்?” என கேள்வி எழுப்பினார். அதற்குச் சற்றும் தாமதிக்காமல் ஜான்வி கபூர், “நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன்” என பதில் அளித்தார். இந்த பதிலை யாரும் எதிர்பார்க்காததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே சுதாரித்துக்கொண்ட ஜான்வி “சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். தயவுசெய்து பத்திரிகைகளில் போட்டுவிடாதீர்கள்” என்று கேட்டுக்கொண்டார். அதைக் கேட்டு அரங்கம் சிரிப்பொலியில் நிறைந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.