நீதியை மூடிமறைக்க இலஞ்சத்தின் மூலம் முயற்சி!
இலஞ்சம் கொடுத்து நீதியை மூடிமறைக்க சிலர் முயற்சிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘இலஞ்சம் மோசடிகள் தொடர்பில் முதலில் அரசியல்வாதிகள் திருந்த வேண்டும். பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளனர். எனவே இது தொடர்பாக அரசியல்வாதிகள் அவதானம் செலுத்த வேண்டும்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான மதுபான சாலைகள் திறக்கப்பட்டு வழிநடத்தப்படுகின்றன. மட்டக்களப்பில் மாத்திரம் 20 முதல் 67 வரையான சட்டவிரோத மதுபானசாலைகள் உள்ளன.
இது தொடர்பான நான் தடுக்க சென்றால் எனக்கு இலஞ்சம் தருவதாக கூறுகின்றனர். பொலிஸாருக்கு இது தொடர்பான அறிவித்தால் அதனை அவர்கள் கண்டுக்கொள்வதில்லை. அவர்களும் இலஞ்சம் பெறுகின்றனர். இலஞ்சம் கொடுத்து நீதியை மூடிமறைக்க பார்கின்றனர்.
அத்துடன், மட்டகளப்பிலுள்ள அர்ஜூன அலோசியஸின் எத்தனோல் நிறுவனத்திற்கு எதிராக நான் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தேன். இது தொடர்பாக எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
இனிமேல் எத்தனோல் நிறுவனம் தொடர்பாகவோ அல்லது அர்ஜூன அலோசியஸுக்கு எதிராகவோ எதுவும் பேச வேண்டாம். 5 கோடி ரூபா தருவதாக தொலைபேசியில் அழைத்தவர்கள் கூறியதாகவும்’ அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
#Joykeswaran #Sinithampi #Batti #Tamil_news #Wiski #Arjuna
நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘இலஞ்சம் மோசடிகள் தொடர்பில் முதலில் அரசியல்வாதிகள் திருந்த வேண்டும். பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளனர். எனவே இது தொடர்பாக அரசியல்வாதிகள் அவதானம் செலுத்த வேண்டும்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான மதுபான சாலைகள் திறக்கப்பட்டு வழிநடத்தப்படுகின்றன. மட்டக்களப்பில் மாத்திரம் 20 முதல் 67 வரையான சட்டவிரோத மதுபானசாலைகள் உள்ளன.
இது தொடர்பான நான் தடுக்க சென்றால் எனக்கு இலஞ்சம் தருவதாக கூறுகின்றனர். பொலிஸாருக்கு இது தொடர்பான அறிவித்தால் அதனை அவர்கள் கண்டுக்கொள்வதில்லை. அவர்களும் இலஞ்சம் பெறுகின்றனர். இலஞ்சம் கொடுத்து நீதியை மூடிமறைக்க பார்கின்றனர்.
அத்துடன், மட்டகளப்பிலுள்ள அர்ஜூன அலோசியஸின் எத்தனோல் நிறுவனத்திற்கு எதிராக நான் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தேன். இது தொடர்பாக எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
இனிமேல் எத்தனோல் நிறுவனம் தொடர்பாகவோ அல்லது அர்ஜூன அலோசியஸுக்கு எதிராகவோ எதுவும் பேச வேண்டாம். 5 கோடி ரூபா தருவதாக தொலைபேசியில் அழைத்தவர்கள் கூறியதாகவும்’ அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
#Joykeswaran #Sinithampi #Batti #Tamil_news #Wiski #Arjuna

.jpeg
)





கருத்துகள் இல்லை