மன்னார் புகையிரதம் மீது தாக்குதல்!

கொழும்பில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை காலை தலைமன்னார் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த புகையிரதம் மீது, மாலை 6.15 மணியளவில், மன்னார் பகுதியில் வைத்து சராமாரியாகக் கற்கள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பேரூந்தின் கண்ணாடிகள் சேதடைந்ததுடன், சாரதிக்கும் சிறு காயம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

தலைமன்னார் பிரதான வீதி கரிசலுக்கும் ஓலைத்தொடுவாயுக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் இந்தக் கல்வீச்சுச் நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது குறித்த புகையிரதம் சிறிது தூரத்தில் நிறுத்தப்பட்டது. இந்த தாக்குதலின் போது குறித்த புகையிரதத்தின் எஞ்சின் கண்ணாடிகள் சேதமடைந்ததோடு, புகையிரதத்தின் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மன்னார் காவல் நிலையத்தில் உடனடியாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் விசாரனைகளை மேற்கொண்ட காவற்துறையினர் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 15 வயதுடைய சிறுவனைக் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரனைகளை மன்னார் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.