கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை!

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவர்களான கி.பானுஜன் மற்றும் பி.நித்திலன் ஆகியோர் தேசிய ரீதியில் 2018 நடைபெற்ற கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டிகளில் வெற்றி பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

கி.பானுஜன் தேசிய மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் தேசிய ரீதியில் 11 வது இடத்தையும் தமிழ் பாடசாலைகளுக்கிடையில் 4 வது இடத்தையும் பெற்றுக்கொண்டார்

பி.நித்திலன் பன்னாட்டு கணித ஒலிம்பியாட் போட்டிகளில் பங்குபெற்றுவதற்க்கான போட்டியில் தேசிய ரீதியில் 44 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.