காடுகளை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என கோரிக்கை!

காடுகளை பாதுகாப்பதற்கு பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அத்துடன், காடுகளுக்கு தீ வைக்கும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு, அந்த செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் காடுகளுக்கு தீ வைக்கும் செயற்பாடுகள் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட காட்டு தீ பரவல் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு முப்படையினர், தீயணைப்பு பிரிவினர், வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் பல வகைகளில் உதவிகளை வழங்கியிருந்ததாகவும் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.