தாயக மண் காக்க அணி திரள்வோம்!
தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்கள் திட்டமிட்டு அரசால் அப கரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மகாவலி எல் வல யம் ஊடாக முல்லைத்தீவு மக்களின் பரம்பரைக் காணிகள் அபகரிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தவும் தமிழ் மக்கள் அனைவரும் நாளை அணிதிரள வேண்டும் என்று மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
முல்லைத்தீவில் மகாவலி எல் வலயம் ஊடாகத் தமிழ் மக்களின் காணிகள் பறிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவில் நாளை மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழர்களின் காணிகள் பறிக்கப்படுவதை தடுத்துப் பாதுகாக்கும் நோக்கில் கிராமிய அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் பங்களிப்புடன் மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவை என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் ஏற்பாட்டில் இந்தப் பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.
இந்தப் பேரணி முற்பகல் 11 மணிக்கு முல்லைத்தீவு பிடபிள்யூடி சந்தியில் (சம்பேதுருவானவர் ஆலயம் முன்பாக) ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தைச் சென்றடையும்.
போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு முல்லைத்தீவில் நேற்று நடைபெற்றது. அந்தச் சந்திப்பிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
துண்டாடப்படும் வடக்கு
செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அருட்பணி ஆம்ஸ்ரோங் அடிகளார் தெரிவித்ததாவது,
30 ஆண்டுகளாக நாம் போரைச் சந்தித்தோம். போரில் தோற்றோம் என்பதற்கு அப்பால் அரசின் திட்டமிட்ட பல்வேறு செயற்பாடுகளால் பல இழப்புக்களைச் சந்தித்து வருகின்றோம். மகாவலி அபிவிருத்தி பற்றிப் பல அறிந்துள்ளோம். அதன் உள்விடயங்களை ஆராய்ந்தபோதே அது எமது மக்களுக்குப் பெரும் பாதிப்பு என்பதை அறிந்தோம்.
மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் வடக்கு மாகாணம் துண்டாடப்படுகின்ற ஒரு சூழல் காணப்படுகின்றது. இலங்கை அரசு காலத்துக்குக் காலம் திட்டமிட்டு வடகிழக்கு நிலங்களைத் துண்டாடிச் சிங்களக் குடியேற்றங்களை அமைத்து நிலங்களை அபகரித்து மக்களின் விகிதாசாரங்களை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றது.
மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் போருக்குப் பின்னர் மிக வேகமாக முல்லைத்தீவின் நிலப்பகுதிகளில் பல சூறையாடப்படுகின்றன. அதை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் வகையில் நாளை பெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். அதன் ஊடாக பன்னாட்டு ரீதியிலும், உள்நாட்டில் இருந்தும் அரசுக்கு நெருக்கடிகளைக் கொடுத்து இந்த ஆக்கிரமிப்புக்களை நிறுத்த வலியுறுத்துவோம் – என்றார்.
கவனத்திலெடுக்காத அரசு
மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான க.சுதர்சன் தெரிவித்ததாவது,
முல்லைத்தீவு மக்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். கடல், நில வளங்கள் திட்டமிட்டுப் பறிக்கப்படுகின்றன. இவற்றுக்கு எதிராக அரசியல்வாதிகள் குரல் கொடுத்தாலும், அமைப்புக்கள் கண்டனங்கள் தெரிவித்தாலும் அதற்கு அரசு எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் மகாவலி அதிகார சபை ஊடாக வடகிழக்கு மாகாணத்துக்கு இடைப்பட்ட பகுதியில் பெரும் நிலப்பரப்பை ஆக்கரமித்துள்ளது. மக்களின் வயல் நிலங்கள், வளமான காடுகளை கையகப்படுத்தியுள்ளது.
தடைச் சட்டங்களை இயற்றி மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்துள்ளனர். இந்த உண்மை நிலைமையை வெளிப்படுத்த வேண்டும். தமிழர்களுக்கு எதிராக நடக்கும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்றார்.
சிங்களக் குடியேற்றத்தின் கருவி
மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வி.நவநீதன் தெரிவித்ததாவது,
தமிழர்களின் பூர்வீக நிலங்களும், வாழ்வாதார நிலங்களும் பறிக்கப்பட்டுச் சிங்களக் குடியேற்றத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. வெலிஓயா என்ற பெயரில் உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுடன் முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
கொக்குளாயில் உள்ள விகாரை, நாயாற்றில் அமைக்க முயற்சிக்கப்படுகின்ற விகாரைகள் ஊடாக தமிழர்களின் வரலாறுகள் திட்டமிட்டுத் திரிபுபடுத்தப்பட்டு சிங்களக் குடியேற்றங்களுக்கான கருவியாக மகாவலித் திட்டம் பயன்படுத்தப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் உடனடியாக மகாவலித் திட்டச் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். மகாவலி எல் வலயத்துக்கு அடுத்ததாகத் திட்டமிடப்பட்டுள்ள கே, ஜே வலயங்கள் ஊடாக வடக்கு மாகாணத்தின் இதயபூமிகளைத் துண்டாடி வடக்கு மாகாணத்தின் சனத்தொகையை மாற்றியமைத்து இனப்பரம்பலை மாற்றி தமிழ் மக்களின் அரசியல் பலத்தைச் சிதைக்கும் முயற்சிகளை உடன் நிறுத்த வேண்டும்.
தமிழ் மக்களின் காணிகளை மகாவலித் திட்டத்தில் விட்டுக்கொடுத்துவிட்டு இனப்பிரச்சினைத் தீர்வு பற்றிப் பேசுவதில் பயனில்லை என்ற அடிப்படையில் தமிழ்த் தலைமைகள் இந்தவிடயத்தில் ஒன்றுபட்டு உழையக்க வேண்டும். முல்லைத்தீவில் நடக்கும் அமைதிப் பேரணியில் கட்சி பேதமின்றி, இன மத பேதங்களில் இன்றி அனைவரும் அணிதிரள வேண்டும் என்று அழைக்கின்றோம் – என்றார்.
முல்லைத்தீவில் மகாவலி எல் வலயம் ஊடாகத் தமிழ் மக்களின் காணிகள் பறிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவில் நாளை மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழர்களின் காணிகள் பறிக்கப்படுவதை தடுத்துப் பாதுகாக்கும் நோக்கில் கிராமிய அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் பங்களிப்புடன் மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவை என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் ஏற்பாட்டில் இந்தப் பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.
இந்தப் பேரணி முற்பகல் 11 மணிக்கு முல்லைத்தீவு பிடபிள்யூடி சந்தியில் (சம்பேதுருவானவர் ஆலயம் முன்பாக) ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தைச் சென்றடையும்.
போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு முல்லைத்தீவில் நேற்று நடைபெற்றது. அந்தச் சந்திப்பிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
துண்டாடப்படும் வடக்கு
செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அருட்பணி ஆம்ஸ்ரோங் அடிகளார் தெரிவித்ததாவது,
30 ஆண்டுகளாக நாம் போரைச் சந்தித்தோம். போரில் தோற்றோம் என்பதற்கு அப்பால் அரசின் திட்டமிட்ட பல்வேறு செயற்பாடுகளால் பல இழப்புக்களைச் சந்தித்து வருகின்றோம். மகாவலி அபிவிருத்தி பற்றிப் பல அறிந்துள்ளோம். அதன் உள்விடயங்களை ஆராய்ந்தபோதே அது எமது மக்களுக்குப் பெரும் பாதிப்பு என்பதை அறிந்தோம்.
மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் வடக்கு மாகாணம் துண்டாடப்படுகின்ற ஒரு சூழல் காணப்படுகின்றது. இலங்கை அரசு காலத்துக்குக் காலம் திட்டமிட்டு வடகிழக்கு நிலங்களைத் துண்டாடிச் சிங்களக் குடியேற்றங்களை அமைத்து நிலங்களை அபகரித்து மக்களின் விகிதாசாரங்களை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றது.
மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் போருக்குப் பின்னர் மிக வேகமாக முல்லைத்தீவின் நிலப்பகுதிகளில் பல சூறையாடப்படுகின்றன. அதை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் வகையில் நாளை பெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். அதன் ஊடாக பன்னாட்டு ரீதியிலும், உள்நாட்டில் இருந்தும் அரசுக்கு நெருக்கடிகளைக் கொடுத்து இந்த ஆக்கிரமிப்புக்களை நிறுத்த வலியுறுத்துவோம் – என்றார்.
கவனத்திலெடுக்காத அரசு
மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான க.சுதர்சன் தெரிவித்ததாவது,
முல்லைத்தீவு மக்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். கடல், நில வளங்கள் திட்டமிட்டுப் பறிக்கப்படுகின்றன. இவற்றுக்கு எதிராக அரசியல்வாதிகள் குரல் கொடுத்தாலும், அமைப்புக்கள் கண்டனங்கள் தெரிவித்தாலும் அதற்கு அரசு எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் மகாவலி அதிகார சபை ஊடாக வடகிழக்கு மாகாணத்துக்கு இடைப்பட்ட பகுதியில் பெரும் நிலப்பரப்பை ஆக்கரமித்துள்ளது. மக்களின் வயல் நிலங்கள், வளமான காடுகளை கையகப்படுத்தியுள்ளது.
தடைச் சட்டங்களை இயற்றி மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்துள்ளனர். இந்த உண்மை நிலைமையை வெளிப்படுத்த வேண்டும். தமிழர்களுக்கு எதிராக நடக்கும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்றார்.
சிங்களக் குடியேற்றத்தின் கருவி
மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வி.நவநீதன் தெரிவித்ததாவது,
தமிழர்களின் பூர்வீக நிலங்களும், வாழ்வாதார நிலங்களும் பறிக்கப்பட்டுச் சிங்களக் குடியேற்றத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. வெலிஓயா என்ற பெயரில் உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுடன் முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
கொக்குளாயில் உள்ள விகாரை, நாயாற்றில் அமைக்க முயற்சிக்கப்படுகின்ற விகாரைகள் ஊடாக தமிழர்களின் வரலாறுகள் திட்டமிட்டுத் திரிபுபடுத்தப்பட்டு சிங்களக் குடியேற்றங்களுக்கான கருவியாக மகாவலித் திட்டம் பயன்படுத்தப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் உடனடியாக மகாவலித் திட்டச் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். மகாவலி எல் வலயத்துக்கு அடுத்ததாகத் திட்டமிடப்பட்டுள்ள கே, ஜே வலயங்கள் ஊடாக வடக்கு மாகாணத்தின் இதயபூமிகளைத் துண்டாடி வடக்கு மாகாணத்தின் சனத்தொகையை மாற்றியமைத்து இனப்பரம்பலை மாற்றி தமிழ் மக்களின் அரசியல் பலத்தைச் சிதைக்கும் முயற்சிகளை உடன் நிறுத்த வேண்டும்.
தமிழ் மக்களின் காணிகளை மகாவலித் திட்டத்தில் விட்டுக்கொடுத்துவிட்டு இனப்பிரச்சினைத் தீர்வு பற்றிப் பேசுவதில் பயனில்லை என்ற அடிப்படையில் தமிழ்த் தலைமைகள் இந்தவிடயத்தில் ஒன்றுபட்டு உழையக்க வேண்டும். முல்லைத்தீவில் நடக்கும் அமைதிப் பேரணியில் கட்சி பேதமின்றி, இன மத பேதங்களில் இன்றி அனைவரும் அணிதிரள வேண்டும் என்று அழைக்கின்றோம் – என்றார்.
கருத்துகள் இல்லை