சுருக்குவலை மீதான தடை தொடரும்!
முல்லைத்தீவு மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்குக் குழு ஒன்று அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை சுருக்குவலை மீன்பிடிக்குத் தடை விதிப்பது என்றும், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அனுமதிகளையும் இல்லாமல் செய்யப்படும் என்றும் மீன்பிடி அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா நேற்று அறிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பாக சுருக்குவலை மீன்பிடிச் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் உள்ளூர் மீனவர்கள் குற்றம்சுமத்தியிருந்தனர். கடந்த 2ஆம் திகதி கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தியிருந்தனர்.
போராட்டக்காரர்களை கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் சந்திக்க மறுத்தமையடுத்து, திணைக்களம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அன்றைய தினத்திலிருந்து திணைக்களத்தின் முன்பாக தொடர் போராட்டத்தில் மீனவர்கள் குதித்திருந்தனர்.
கடந்த 8ஆம் திகதி மீனவர்களுடன் கொழும்பில் சந்திப்பு இடம்பெறும் என்று கூறப்பட்டிருந்தது. முல்லைத்தீவு மீனவர்கள் கொழும்பில் இடம்பெறும் சந்திப்பில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தார்கள். இதனையடுத்து முல்லைத்தீவில் சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதற்கமைவாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நேற்றுக் காலை சந்திப்பு இடம்பெற்றது.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்குக் குழு ஒன்று அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை சுருக்குவலை மீன்பிடிக்குத் தடை விதிப்பது என்றும், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அனுமதிகளையும் இல்லாமல் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் முல்லைத்தீவு மாவட்ட நீரியல்வளத் திணைக்களத்துக்கு முன்பாகக் கொட்டகை அமைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவது தடுத்து நிறுத்தப்படும் என்று அவர் வழங்கிய வாக்குறுதியை அடுத்து மீனவர்கள் கடந்த 10 நாள்களாக நடத்தி வந்த தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.
அமைச்சருடன் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கினிதே ஜனகபிரசன்ன குமார, அமைச்சு அதிகாரிகள், பிரசதியமைச்சர் காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா, எம்.ஏ.சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு விவசாய அமைச்சர் க.சிவனேசன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் து.ரவிகரன், ஆ.புவனேஸ்வரன், கமலேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பாக சுருக்குவலை மீன்பிடிச் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் உள்ளூர் மீனவர்கள் குற்றம்சுமத்தியிருந்தனர். கடந்த 2ஆம் திகதி கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தியிருந்தனர்.
போராட்டக்காரர்களை கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் சந்திக்க மறுத்தமையடுத்து, திணைக்களம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அன்றைய தினத்திலிருந்து திணைக்களத்தின் முன்பாக தொடர் போராட்டத்தில் மீனவர்கள் குதித்திருந்தனர்.
கடந்த 8ஆம் திகதி மீனவர்களுடன் கொழும்பில் சந்திப்பு இடம்பெறும் என்று கூறப்பட்டிருந்தது. முல்லைத்தீவு மீனவர்கள் கொழும்பில் இடம்பெறும் சந்திப்பில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தார்கள். இதனையடுத்து முல்லைத்தீவில் சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதற்கமைவாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நேற்றுக் காலை சந்திப்பு இடம்பெற்றது.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்குக் குழு ஒன்று அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை சுருக்குவலை மீன்பிடிக்குத் தடை விதிப்பது என்றும், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அனுமதிகளையும் இல்லாமல் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் முல்லைத்தீவு மாவட்ட நீரியல்வளத் திணைக்களத்துக்கு முன்பாகக் கொட்டகை அமைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவது தடுத்து நிறுத்தப்படும் என்று அவர் வழங்கிய வாக்குறுதியை அடுத்து மீனவர்கள் கடந்த 10 நாள்களாக நடத்தி வந்த தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.
அமைச்சருடன் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கினிதே ஜனகபிரசன்ன குமார, அமைச்சு அதிகாரிகள், பிரசதியமைச்சர் காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா, எம்.ஏ.சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு விவசாய அமைச்சர் க.சிவனேசன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் து.ரவிகரன், ஆ.புவனேஸ்வரன், கமலேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை