மனோவிடமிருந்து பறிபோகின்றது வடகிழக்கு வீடமைப்பு மற்றும் அபிவிருத்தி!
தலைமை அமைச்சர் ரணில் விக் கிரமசிங்கவின் பணியகத்தின் மேற் பார்வையிலும், கண்காணிப்பிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத் தில் 25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணியை மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக மேற்கொள்ளுமாறு எதிர்க் கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கடிதம் அனுப்பியுள் ளார்.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு அனுப்பிய கடிதத்திலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு வரவு – செலவுத் திட் டத்தில், வட கிழக்கு மாகாணங் களில் 50ஆயிரம் கல்வீடுகளை அமைக்க அரச தலைவர் கீழ் செயற் பட்ட தேசிய ஒருங்கிணைப்பு, நல்லி ணக்க அமைச்சு ஊடாக முன்னெடுக்க முன்மொழியப்பட்டிருந்தது.
பின் னர் 25ஆயிரம் வீடுகளாகக் குறைக் கப்பட்டது. அரச தலைவரின் கீழ் இயங்கிய தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சு, அமைச்சர் மனோ கணேசனின் அமைச்சுடன் நான்கு மாதங்களுக்கு முன்னர் இணைக்கப் பட்டது.
வீட்டுத் திட்டத்தை வீடமைப்புச் செயலணியின் கண்காணிப்பில் நடைமுறைப்படுத்தும் அமைச்சர வைப் பத்திரம் கடந்த மாத இறுதி யில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப் பட்டது.
அமைச்சர் மனோகணேசன், தனது அமைச்சின் ஊடாகவே அது முழுமையாக முன்னெடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியதுடன் அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயற்பட இடமளிக்க முடியாது என்று அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மனோகணேசனின் குழப்பத்தையடுத்து, அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை. வீடமைப்புத் திட்டம் மேலும் தாமதமடையாமல் விரைவாக முன்னெடுப்பதற்காக, மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக அதனை நடைமுறைப்படுத்த கூட்டமைப்பு ஆலோசனை வழங்கியுள்ளது.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சின் மேற்பார்வையிலும், கண்காணிப்பிலும் இதனை முன்னெடுக்குமாறு கூட்டமைப்பின் ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு அனுப்பிய கடிதத்திலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு வரவு – செலவுத் திட் டத்தில், வட கிழக்கு மாகாணங் களில் 50ஆயிரம் கல்வீடுகளை அமைக்க அரச தலைவர் கீழ் செயற் பட்ட தேசிய ஒருங்கிணைப்பு, நல்லி ணக்க அமைச்சு ஊடாக முன்னெடுக்க முன்மொழியப்பட்டிருந்தது.
பின் னர் 25ஆயிரம் வீடுகளாகக் குறைக் கப்பட்டது. அரச தலைவரின் கீழ் இயங்கிய தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சு, அமைச்சர் மனோ கணேசனின் அமைச்சுடன் நான்கு மாதங்களுக்கு முன்னர் இணைக்கப் பட்டது.
வீட்டுத் திட்டத்தை வீடமைப்புச் செயலணியின் கண்காணிப்பில் நடைமுறைப்படுத்தும் அமைச்சர வைப் பத்திரம் கடந்த மாத இறுதி யில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப் பட்டது.
அமைச்சர் மனோகணேசன், தனது அமைச்சின் ஊடாகவே அது முழுமையாக முன்னெடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியதுடன் அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயற்பட இடமளிக்க முடியாது என்று அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மனோகணேசனின் குழப்பத்தையடுத்து, அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை. வீடமைப்புத் திட்டம் மேலும் தாமதமடையாமல் விரைவாக முன்னெடுப்பதற்காக, மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக அதனை நடைமுறைப்படுத்த கூட்டமைப்பு ஆலோசனை வழங்கியுள்ளது.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சின் மேற்பார்வையிலும், கண்காணிப்பிலும் இதனை முன்னெடுக்குமாறு கூட்டமைப்பின் ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை