நாயாற்று பகுதியில் வாடி எரிப்பு- மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

முல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியில் தமிழ் மக்களின் எட்டுவாடிகள் கடந்த 13 ஆம்திகதி எரியூட்டப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நீர்கொழும்பினை சேர்ந்த மூவரைப் பொலிஸார் கைது செய்தனர்.

அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வாடிகள் எரிக்கப்பட்ட பகுதியின் சாம்பல்கள் எடுக்கப்பட்டு இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தீ தானக எரிந்ததா அல்லது வைக்கப்பட்டு எரிந்தா என்பது தொடர்பான அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் மன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 04.09.18 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.