இந்தியாவைப் பகைக்க அரசிற்கு விருப்பமில்லை!

இந்தியாவைப் பகைத்துக் கொள்வதற்கு மத்திய, மாகாண அரசுகளிற்கு விருப்பமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் ஹலப்பதி குறிப்பிட்டுள்ளார்.

வட.மாகாண மீனவர்கள் பிரச்சினை குறித்து இன்று (வியாழக்கிழமை) யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “இந்தியாவைப் பகைத்தால் தங்கள் சுயலாபங்கள், சொகுசு வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் மத்திய அரசும், மாகாண அரசும் வட.மாகாண மீனவர்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பில் இருந்து தவறி வருகின்றன.

வட.மாகாண மீனவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாகாணசபைக்கும், மத்திய அரசுக்கும் உள்ளது. அதனை அவர்கள் செய்யவில்லை. இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்கள் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

எரிபொருள் விலையேற்றத்தினால் மீனவர்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக எவரும் அக்கறை கொள்ளவில்லை.

இந்த நாடு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காணவேண்டுமானால் இந்த நாட்டில் உள்ள மீனவர்களுடைய பொருளாதாரம் வளரவேண்டும்.

அத்துடன், கடற்றொழிலை அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்ட மன்னார், முள்ளிக்குளம் கிராம மக்களை அவர்களுடைய சொந்த நிலங்களில் மீள்குடியேற அனுமதிப்பதன் ஊடாகவே அவர்களுடைய பொருளாதாரத்தை வளர்க்க முடியும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.