ஐஸ்வர்யா ராயின் நீண்ட நாள் ஆசை!

மிகவும் தைரியமான பெண்ணாகப் பல திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராயின் நீண்ட நாள் ஆசை திரைப்படம் இயக்குவதாம்.

சிறிது இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கும் திரைப்படம் ஃபானி கான். உலகம் முழுவதும் இன்று (ஆகஸ்ட் 3) வெளியாகியுள்ளது. இதில் அனில் கபூர், ராஜ்குமார் ராவோ போன்ற பாலிவுட் பிரபலங்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பிரமோஷனை ஒட்டிக் கடந்த சில நாட்களாகவே, ஊடக வெளிச்சம் ஐஸ்வர்யா மீது பட்டுள்ளது. அதில் பல்வேறு விஷயங்களைத் தெரிவித்துவரும் ஐஸ்வர்யா தனது நீண்ட நாள் ஆசை ஒன்றையும் கூறியுள்ளார். அதில், “எனக்குத் திரைப்படங்களில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் எனக்குள் படம் இயக்குவதற்கான ஆர்வம்தான் இப்போது அதிகமாக இருக்கிறது. விரைவில் நான் ஒரு படத்தை இயக்கப் போகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

தனது இந்த லட்சியத்திற்குக் கணவர் அபிஷேக் பச்சன் உறுதுணையாக இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் தன்னுள் இருக்கும் படம் இயக்கும் ஆர்வம் குறித்துப் பேசினாலோ, படம் இயக்கும் போது நடக்கும் நிகழ்வுகளை ஆர்வமுடன் அறிய முற்பட்டாலோ, தன்னை இயக்குநர்கள் கேலியே செய்கின்றனர் எனவும் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார். ஐஸ்வர்யாவின் இந்த பேட்டியின் மூலம் விரைவில் அவர் இயக்கத்தில் ஒரு படம் பார்க்கலாம் என்பது உறுதியாகத் தெரிகிறது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.