ஒரு நாள் எதிர்க்கட்சிப் பதவி ஆசைப்படும் ஆனந்தசங்கரி!

நீங்கள் வைத்துள்ள பதவியை ஒருநாள் தந்து பாருங்கள். அப்பதவியின் மூலம் என்னென்ன செய்ய முடியும் என்பதை காண்பிக்கின்றேன் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் 2004 ஆம் ஆண்டு முதல் நான் வலியுறுத்தி வந்து கொண்டிருக்கின்றேன். ஆனால் இன்று அரசாங்கத்திற்கு ஆதரவளித்துக் கொண்டுள்ள சம்பந்தன் தலைமையிலானவர்கள் இவ்விடயத்தில் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை.

அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவித்து வரும் அவர்கள் கைதிகளின் விடுதலை தொடர்பில் வலியுறுத்த தவறியுள்ளனர்.

அரசாங்கத்தை தாம் தான் காப்பாற்றுவதாகவும், தம்மால் தான் அரசாங்கம் உருவாக்கப்பட்டது எனவும் கூறிக்கொள்ளும் சம்பந்தன் நாளை தான் பிரதமருடனும், ஜனாதிபதியுடனும் பேசப்போகின்றாராம். அப்படியானால் இதுவரை இவர்கள் என்ன செய்தார்கள்.

உங்களால் முடியா விட்டால் எனக்கு தாருங்கள். வைத்துள்ள பதவியை ஒருநாள் தந்து பாருங்கள். அப்பதவியின் மூலம் என்னென்ன செய்ய முடியும் என்பதை காண்பிக்கின்றேன்.

விஜயகலா மீது வழக்கு தொடர வேண்டும் என்ற கருத்து தொடர்பில் சபாநாயகருடன் கருத்து பகிர உள்ளேன். அவர் பொறுப்பு வாய்ந்த அமைச்சு பதவியில் இருந்த போது, அவரும் ஓர் பெண் என்ற படியால் உணர்வுகளை கட்டுப்படுத்தாது அவர் அவ்வாறானதொரு கருத்தை முன்வைத்தார்.

அவர்மீது வழக்கு தொடர வேண்டும் என்றால், 2004ம் ஆண்டு தேர்தலில் தமிழரசு கட்சி விடுதலை புலிகளை ஆதரிப்பதாகவும், அவ்வமைப்பின் செயற்பாடுகளிற்கு முழுமையாக ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்த கருத்து தொடர்பிலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

#anathasankari   #kilinochchi   #sampanthan   #tamilnews 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.