பேர்லின் வாழ் இளையோர்களால் கல்வி வளர்ச்சிக்கு உதவி!
புலம்பெயர் தேசத்தில் பிறந்தாலும் பாசத்தை மறவாது ஊரோடும் உணர்வோடும் ஒருங்கிணையும் பேர்லின் வாழ் இளையோர்கள் - பேர்லின் அம்மா உணவகம்
புலம்பெயர் தேசத்தில் பிறந்தாலும் பாசத்தை மறவாது ஊரோடும் உணர்வோடும் ஒருங்கிணையும் வகையில் பேர்லின் வாழ் இளையோர்களால் தாயகத்தில் கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனுரில் நான்கு ஆசிரியர்கள் - 50 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் புதிய அறிவொளிகல்விச்செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இக் கல்விச்செயற்திட்டத்தால் வறுமை நிலையில் உள்ள மாணவர்கள் இலவசமாக தமது கல்வியை மேம்படுத்த வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இக் கல்விச்செயற்திட்டம் அம்மா உணவகத்தின் ஒருங்கிணைப்பில் தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி , பேர்லின் மாநில இளையோர்களாலும் மற்றும் செல்வி சபீனா உதயகுமார் அவர்களின் இணைந்த நிதி அனுசரணையில் நடைபெறுகின்றது .இவ்வாறான கல்விச்செயற்திட்டம் பேர்லின் அம்மா உணவகத்தின் நிதி அனுசரணையில் ஏற்கனவே நான்கு இடங்களில் நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர் தேசத்தில் பிறந்தாலும் பாசத்தை மறவாது ஊரோடும் உணர்வோடும் ஒருங்கிணையும் வகையில் பேர்லின் வாழ் இளையோர்களால் தாயகத்தில் கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனுரில் நான்கு ஆசிரியர்கள் - 50 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் புதிய அறிவொளிகல்விச்செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இக் கல்விச்செயற்திட்டத்தால் வறுமை நிலையில் உள்ள மாணவர்கள் இலவசமாக தமது கல்வியை மேம்படுத்த வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இக் கல்விச்செயற்திட்டம் அம்மா உணவகத்தின் ஒருங்கிணைப்பில் தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி , பேர்லின் மாநில இளையோர்களாலும் மற்றும் செல்வி சபீனா உதயகுமார் அவர்களின் இணைந்த நிதி அனுசரணையில் நடைபெறுகின்றது .இவ்வாறான கல்விச்செயற்திட்டம் பேர்லின் அம்மா உணவகத்தின் நிதி அனுசரணையில் ஏற்கனவே நான்கு இடங்களில் நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை