ஆட்சியை மீளக் கைப்பற்றுவது- மகிந்தவால் இயலாத காரியம் !
குற்றவாளிகளையும் மோசடியாளர்களையும் தன்வசம் வைத்துக் கொண்டு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சி பீடம் ஏறும் முயற்சிகளை மேற்கொள்வது சாத்தியமற்ற விடயம்.
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச் சந்திர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொதாவில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது-,
அவர் தெரிவித்ததாவது-,
மகிந்த ராஜபக்ச கடந்த காலங்களில் குற்றவாளிகளைத் தன்வசம் வைத்திருந்ததால்தான் பெரும் விளைவுகளைச் சந்தித்தார். அதன்தொடர்ச்சியே தற்போதும் நடைபெறுகின்றது. தேசிய அரசைப் பயனற்றது என்றும் தூற்றும் எந்தத் தகுதியும் எதிர்த்தரப்பினருக்குக் கிடையாது- என்றார்.
கருத்துகள் இல்லை