முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச குடும்பத்தை இந்த அரசு எப்போதும் சட்டத்தின் முன் நிறுத்தாது என்று தெரிவித்துள்ளார் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப் பில் கருத்துத் தெரிவித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது:-
பிரகீத் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணை செய்ய வேண்டும். கூட்டரசு இந்த விடயத்தில் பொறுப்புடன் செயற்படுவது கட்டாயம்.
இனியும் தீர்வைப் பெறாது இருக்க முடியாது. அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தொடர்ச்சியான தெய்வ வழிபாடுகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளேன். இராணுவத்தால் மறைக்கப்படுகின்ற விடயங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்க அரசு தலையீடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால் எனது சாபம் அரசுக்குப் போய்ச் சேரும்.
ராஜபக்ச குடும்பத்தை இந்த அரசு எப்போதும் சட்டத்தின் முன் நிறுத்தப் போவதில்லை. அவர்களுக்கும், குற்றத்தை மறைக்கும் நபர்களுக்கும் இயற்கையே தண்டனை வழங்க வேண்டும் -– என்றார்.
கருத்துகள் இல்லை