தேசிய ரீதியிலான கால்பந்தாட்டம்- மகாஜனக் கல்லூரிவெற்றி கின்னம் வென்றது!
இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய ரீதியிலான கால்பந்தாட்டத்தில் 20 வயது ஆண்கள் பிரிவில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி கிண்ணம் வென்றது.
அநுராதபுர மைதானத்தில் நேற்று முந்ாினம் நடைபெற்ற இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணியை எதிர்த்து கொழும்பு கந்தான டி மெசனட் வித்தியா லய அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பித்தது முதல் இரண்டு அணிகளும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தின. கோல்கள் இல்லாமல் முடிவுக்கு வந்தது முதல் பாதி. இரண்டாம் பாதியிலும் இரண்டு அணியின் வீரர்களும் விடாப் போராட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கோல்கள் அற்ற நிலை ஆட்டத்தில் நீண்டு சென்றது.
கருத்துகள் இல்லை