சிங்கப்பூருக்கு மஹிந்த ராஜபக்ஷ திடீர் விஜயம்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திடீர் பயணமாக சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அவர் சிங்கப்பூரில் நான்கு நாட்கள் தங்கியிருப்பதோடு, தனது சுற்றுப்பயணத்தின் போது சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் இலங்கையர்களை சந்திக்கவுள்ளார்.

மேலும் அவருடன் குடும்பத்தினர் மற்றும் கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், சிங்கப்பூருக்குப் பயணமாகியுள்ளனர்.

எதிர்வரும் ஒக்ரோபர் 01ஆம் திகதி அவர் மீண்டும் நாடு திரும்புவார்என்றும் கூறப்படுகிறது.

#mahinda  #singapore  #tamilnews  #srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.