மன்னார் ஆயர் இத்தாலியில் முக்கிய சந்திப்பு

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு. இம்மானுவேல் பெர்னாந்து இத்தாலிக்கு பயணம் செய்துள்ளார்.

இத்தாலியின் பலெர்மோ ஆன்மீகத்தளத்தைச் சார்ந்த 35 பிள்ளைகளுக்கு உறுதிப்பூசுதல் திருவருட்சாதனம் வழங்கும் பொருட்டு அவர் அங்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்றைய தினம் காலை பலெர்மோ மறைமாவட்ட பேராயர் மேதகு கொறாதோ லொறபிச்சேயினை அவர் சந்தித்துள்ளார்.

பலெர்மோ மறைமாவட்ட பேராலயத்தையும் பலெர்மோ மறைமாவட்ட முத்திப்பேறுபெற்ற பினோ புலிசியின் கல்லறையையும் தரிசித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.