அரசின் நகர்வுகள் தமிழ் மக்கள் விடயத்தில் மந்தம்!
நாம் இந்த அரசின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றோம். தமிழ் மக்களின் விடயங்களில் அரசின் நடவடிக்கைகள் மிக மெதுவாகவே நகர்கின்றன.
இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா.
திருகோணமலையில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் தமிழகப் பத்திரிகையாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் அரசியக் கட்சிகள் குழாமுக்கும், கிழக்கு மாகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையே நேற்றுமுன்தினம் சிநேகபூர்வக் கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தெரிவித்தாவது-,
முன்னர் எம்மிடம் இரு போராட்ட சக்திகள் இருந்தன. ஒன்று விடுதலைப் புலிகளின் ஆயுத பலம். மற்றையது எமது மக்களின் வாக்குப் பலம். அவற்றில் ஒன்றை நாம் இழந்துள்ளோம். தற்போது எம்மிடம் உள்ள மக்கள் ஜனநாயகப் பலத்தை மட்டுமே நம்பியுள்ளோம்.
இந்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். எமக்காக இந்திய அரசு தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் -–- என்றார்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா.
திருகோணமலையில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் தமிழகப் பத்திரிகையாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் அரசியக் கட்சிகள் குழாமுக்கும், கிழக்கு மாகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையே நேற்றுமுன்தினம் சிநேகபூர்வக் கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தெரிவித்தாவது-,
முன்னர் எம்மிடம் இரு போராட்ட சக்திகள் இருந்தன. ஒன்று விடுதலைப் புலிகளின் ஆயுத பலம். மற்றையது எமது மக்களின் வாக்குப் பலம். அவற்றில் ஒன்றை நாம் இழந்துள்ளோம். தற்போது எம்மிடம் உள்ள மக்கள் ஜனநாயகப் பலத்தை மட்டுமே நம்பியுள்ளோம்.
இந்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். எமக்காக இந்திய அரசு தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் -–- என்றார்.
கருத்துகள் இல்லை