வட்டுக்கோட்டையில் நாசகர மக்கள் சேவை பணியாம்??
அரச தலைவர் செயலகத்தால் நடைமுறைப்படுத்தப்படும் மக்கள் சேவை பணி நடமாடும் சேவை வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் நேற்று இடம்பெற்றது. பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நடமாடும் சேவையில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந் திரன், திருமதி விஜயகலா மகேஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் த.நடனேந்திரன், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் நா.வேதநாயகன், மேலதிக மாவட்ட செயலர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம், உதவி மாவட்டச் செயலர் எஸ்.சுதர்சன், வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் திருமதி பொ.பிறேமினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், இந்த நடமாடும் சேவை மக்களுக்குத் தேவையானது. அவர்களின் பல தேவைகளை இங்கே ஓரிடத்தில் நிறைவேற்றக் கொள்ளக் கூடியதாக இருக்கும். மாவட்டச் செயலர் தலைமையிலான அதிகாரிகள் இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றார்கள். நடமாடும் சேவை ஊடாக யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்ட இரண்டு லட்சம் பிணக்குகளில் ஒன்றரை லட்சம் பிணக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும் அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘என்ரபிறைஸ் சிறிலங்கா’ திட்டத்தை எமது மக்கள் உரிய வகையில் பயன்படுத்த வேண்டும். சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள், விவசாயிகள், பாடசாலைகள், இளையோர், சுயதொழில் செய்வோர் என்று எல்லோரும் இதனைப் பயன்படுத்த முடியும். அரசின் ஊடாக சலுகையுடன் வழங்கப்படும் இதனை முழுமையாகப் பயன்படுத்தவேண்டும் – என்றார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர, அரச தலைவர் மைத்திரி மற்றும் தலைமை அமைச்சர் ரணிலின் கூட்டு முயற்சியினாலேயே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
மேலும் அரச தலைவர் மைத்திரிபால யாழ்ப்பாணத்துக்கு வருகைதரும்போது 2 ஆயிரத்து 600 மாற்றுத் திறனாளிகளுக்கு பல உதவிகளை வழங்கவுள்ளார்.
வடக்கில் 9 ஆயிரத்து 300 பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். இவர்களுக்கும் உதவிகள் கிடைக்கும். இந்த நடமாடும் சேவையில் அதிகாரிகள் ஒன்றிணைந்து பணிபுரிவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது – என்றார்.
இந்த நிகழ்வில் 20 பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன. திருமணம் செய்த இரு தம்பதியருக்கு திருமணப் பதிவு மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது.
நடமாடும் சேவையில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந் திரன், திருமதி விஜயகலா மகேஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் த.நடனேந்திரன், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் நா.வேதநாயகன், மேலதிக மாவட்ட செயலர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம், உதவி மாவட்டச் செயலர் எஸ்.சுதர்சன், வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் திருமதி பொ.பிறேமினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், இந்த நடமாடும் சேவை மக்களுக்குத் தேவையானது. அவர்களின் பல தேவைகளை இங்கே ஓரிடத்தில் நிறைவேற்றக் கொள்ளக் கூடியதாக இருக்கும். மாவட்டச் செயலர் தலைமையிலான அதிகாரிகள் இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றார்கள். நடமாடும் சேவை ஊடாக யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்ட இரண்டு லட்சம் பிணக்குகளில் ஒன்றரை லட்சம் பிணக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும் அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘என்ரபிறைஸ் சிறிலங்கா’ திட்டத்தை எமது மக்கள் உரிய வகையில் பயன்படுத்த வேண்டும். சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள், விவசாயிகள், பாடசாலைகள், இளையோர், சுயதொழில் செய்வோர் என்று எல்லோரும் இதனைப் பயன்படுத்த முடியும். அரசின் ஊடாக சலுகையுடன் வழங்கப்படும் இதனை முழுமையாகப் பயன்படுத்தவேண்டும் – என்றார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர, அரச தலைவர் மைத்திரி மற்றும் தலைமை அமைச்சர் ரணிலின் கூட்டு முயற்சியினாலேயே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
மேலும் அரச தலைவர் மைத்திரிபால யாழ்ப்பாணத்துக்கு வருகைதரும்போது 2 ஆயிரத்து 600 மாற்றுத் திறனாளிகளுக்கு பல உதவிகளை வழங்கவுள்ளார்.
வடக்கில் 9 ஆயிரத்து 300 பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். இவர்களுக்கும் உதவிகள் கிடைக்கும். இந்த நடமாடும் சேவையில் அதிகாரிகள் ஒன்றிணைந்து பணிபுரிவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது – என்றார்.
இந்த நிகழ்வில் 20 பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன. திருமணம் செய்த இரு தம்பதியருக்கு திருமணப் பதிவு மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை