எமது இன அழிவுக்கு நாமே காரணம் !
போர் முடிவடையும் வரை மதிப்பாகவும் கண்ணியமாகவும் வாழ்ந்த தமிழ் இனம் இன்று எங்கேயோ சென்று கொண்டி ருக்கின்றது .இதற்கு வாள்வெட்டு,குத்து,சண்டை,கஞ்சா ,கடத்தல் போன்றன காரணமாக இருந்தாலும், மாற்றான் திரைமறைவில் பல செயற்பாடுகளை செயற்படுத்தினாலும், நாங்களும் இதற்கு பாத்திரவாளிகள் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். என்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.
முள்ளியவளை, தண்ணீரூற்று இந்து தமிழ்க் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு நிகழ்வில் நேற்று முன் தினம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்ததாவது :
போரில் நாங்கள் இழந்துபோனவை களையும் இன்றுவரை அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்யாதவர்களாக இருக்கின்றோம்.
இந்த பாடசாலைக்கான தேவைகள் குறித்து பட்டியல் இட்டு கொடுக்கப்படுமாக இருந்தால் இயன்றவரை அந்த தேவையினை என்னால் நிவர்த்தி செய்து கொடுக்கமுடியும். தண்ணீரூற்று கிராமத்தில் இரண்டு வீதிகளை சீரமைப்பதற்குச் சிறப்பாக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து 37 இலட்சம் ரூபா ஒது க்கப்பட்டுள்ளது.
இந்தபங பாடசாலையின் வீதி சீர மைப்பதற்குச் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. பாடசாலையின் கரையோரமாக உள்ள பாதை தார் போடுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
போர் முடிவடைந்ததன் பின்னர் முள்ளிவாய்க்காலை மையமாக வைத்து வன்னியினை நோக்கி பெருமளவு நிதி வழங்கப்பட்டாலும் எங்கள் பாடசாலைப் பிள்ளைகள் ஓலைக் கொட்டகையில் சீராக்கப்ப டாத வகுப்பறையில் கல்வி கற்பது மிகவும் வேதனைக்குரிய விடயம்.
இந்தப் பிரதேசத்தில் உள்ள பூதன்வயல் பாடசாலை தனது சொந்தக் காணியில் கட்டடம் கட்டி பிள்ளை களுக்கு கல்வி கற்க முடியாத நிலை யில் காணப்படுகின்றது. பொது மண்டபத்தில்தான் இதுவரை கல்வி கற்று வருகின்றார்கள்.
அரச தலைவர் அண்மையில் எங்களுடன் கலந்துரையாடும்போது ,பாடசாலைக் காணிகள் அபகரிக்கப்பட்டு இருந்தால் அதனை உடனடியாக விடுவிக்க முயற்சி செய்வேன் என்று சொல்லி இருந்தார். எதிர்வரும் 3 ஆம் திகதி அரசதலைவருடன் கலந்துரையாடல் இருக்கின்றது.
அந்தநேரத்தில் பூதன் வயல் கிராமத்தின் பாடசாலைக் காணி தனியாரால் ஆக்கிரமிப்பு தொடர்பான ஆதாரங்களை அரசதலைவரிடம் கையளித்து விரைவில் விடுவித்து கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்பதை இந்த வேளையில் தெரிவித்துக்கொள்கின்றேன்.
போர் முடிவடையும் வரை மதிப்பாகவும் , கண்ணியமாகவும் வாழ்ந்த இந்தத் தமிழ் இனம் இன்று எங்கேயோ சென்று கொண்டிருக்கின்றது. இதற்கு வாள்வெட்டு, குத்து, சண்டை, கஞ்சா கடத்தல் போன்றன காரணமாக இருந்தாலும் மாற்றான் திரைமறைவில் பல செயற்பாடுகளை செயற்படுத்தினாலும் நாங்களும் இதற்கு பாத்திரவாளிகள் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இன்றைய காலத்தில் பிள்ளைகள் தொலைக்காட்சியில் போகின்ற சமூகத்திற்கு முரணான நாடகங்கள், தொலைபேசியில் பார்க்கக்கூடாத எத்தனையோ செயற்பாடுகளை பார்த்து விட்டே நித்திரைக்குப் போகின்றார்கள்.
இந்த நிலை மாறவேண்டும் ஒவ்வொரு தாயும் தந்தையும் இதனை மாற்றவேண்டும்
இன்று எங்கள் காணிகள் பறிபோகின்றது. வளங்கள் பறிபோகின்றது. மக்களுக்கு குரல் கொடுப்பதற்காக தமிழ்ப் பிரதிநிதிகள் மட்டும்தான் மக்களிடத்தில் வருகின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முள்ளியவளை, தண்ணீரூற்று இந்து தமிழ்க் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு நிகழ்வில் நேற்று முன் தினம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்ததாவது :
போரில் நாங்கள் இழந்துபோனவை களையும் இன்றுவரை அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்யாதவர்களாக இருக்கின்றோம்.
இந்த பாடசாலைக்கான தேவைகள் குறித்து பட்டியல் இட்டு கொடுக்கப்படுமாக இருந்தால் இயன்றவரை அந்த தேவையினை என்னால் நிவர்த்தி செய்து கொடுக்கமுடியும். தண்ணீரூற்று கிராமத்தில் இரண்டு வீதிகளை சீரமைப்பதற்குச் சிறப்பாக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து 37 இலட்சம் ரூபா ஒது க்கப்பட்டுள்ளது.
இந்தபங பாடசாலையின் வீதி சீர மைப்பதற்குச் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. பாடசாலையின் கரையோரமாக உள்ள பாதை தார் போடுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
போர் முடிவடைந்ததன் பின்னர் முள்ளிவாய்க்காலை மையமாக வைத்து வன்னியினை நோக்கி பெருமளவு நிதி வழங்கப்பட்டாலும் எங்கள் பாடசாலைப் பிள்ளைகள் ஓலைக் கொட்டகையில் சீராக்கப்ப டாத வகுப்பறையில் கல்வி கற்பது மிகவும் வேதனைக்குரிய விடயம்.
இந்தப் பிரதேசத்தில் உள்ள பூதன்வயல் பாடசாலை தனது சொந்தக் காணியில் கட்டடம் கட்டி பிள்ளை களுக்கு கல்வி கற்க முடியாத நிலை யில் காணப்படுகின்றது. பொது மண்டபத்தில்தான் இதுவரை கல்வி கற்று வருகின்றார்கள்.
அரச தலைவர் அண்மையில் எங்களுடன் கலந்துரையாடும்போது ,பாடசாலைக் காணிகள் அபகரிக்கப்பட்டு இருந்தால் அதனை உடனடியாக விடுவிக்க முயற்சி செய்வேன் என்று சொல்லி இருந்தார். எதிர்வரும் 3 ஆம் திகதி அரசதலைவருடன் கலந்துரையாடல் இருக்கின்றது.
அந்தநேரத்தில் பூதன் வயல் கிராமத்தின் பாடசாலைக் காணி தனியாரால் ஆக்கிரமிப்பு தொடர்பான ஆதாரங்களை அரசதலைவரிடம் கையளித்து விரைவில் விடுவித்து கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்பதை இந்த வேளையில் தெரிவித்துக்கொள்கின்றேன்.
போர் முடிவடையும் வரை மதிப்பாகவும் , கண்ணியமாகவும் வாழ்ந்த இந்தத் தமிழ் இனம் இன்று எங்கேயோ சென்று கொண்டிருக்கின்றது. இதற்கு வாள்வெட்டு, குத்து, சண்டை, கஞ்சா கடத்தல் போன்றன காரணமாக இருந்தாலும் மாற்றான் திரைமறைவில் பல செயற்பாடுகளை செயற்படுத்தினாலும் நாங்களும் இதற்கு பாத்திரவாளிகள் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இன்றைய காலத்தில் பிள்ளைகள் தொலைக்காட்சியில் போகின்ற சமூகத்திற்கு முரணான நாடகங்கள், தொலைபேசியில் பார்க்கக்கூடாத எத்தனையோ செயற்பாடுகளை பார்த்து விட்டே நித்திரைக்குப் போகின்றார்கள்.
இந்த நிலை மாறவேண்டும் ஒவ்வொரு தாயும் தந்தையும் இதனை மாற்றவேண்டும்
இன்று எங்கள் காணிகள் பறிபோகின்றது. வளங்கள் பறிபோகின்றது. மக்களுக்கு குரல் கொடுப்பதற்காக தமிழ்ப் பிரதிநிதிகள் மட்டும்தான் மக்களிடத்தில் வருகின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை