அரபு வசந்தம் இறுதியில் அரக்கு வசந்தமானது!
அரபு வசந்தம் பாணியில் போராட்டம் நடத்தப்பட்டுக் கொழும்பு முற்றுகையிடப் படும் என்று சூளுரைத்த அணியினர் இறுதியில் “அரக்கு வசந்தய” (சாராய வசந்தம்) போராட்டத்தையே நடத்தி முடித்துள்ளனர்.
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கிண்டலடித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று கணக்காய்வாளரின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை மீது நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது-,
கொழும்பைச் சுற்றிவளைக்க அணிதிரண்டு வருவோம் என்று அறைகூவல் விடுத்தவர்களை நாம் போராளிகள் என்றே கருதினோம். 6ஆம் திகதி சிறையில் இருப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் போராட்ட வீரர்கள் குடித்துக் கூத்தடித்துவிட்டு இறுதியில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். போராளிகள் என்று சூளுரைத்தவர்கள் திருநங்கைகளாகியுள்ளனர்.
அரபு வசந்தம் பற்றிப் பேசிக்கொண்டே வந்தார்கள். இறுதியில் சாராய வசந்தத்துடன் முடித்துக் கொண்டனர். என்மீது பழிசுமத்தப் பல கதைகள் கூறுகின்றனர். கலாவதியான பால் பைக்கற்றுக்களை வழங்கிவிட்டு இப்போது எம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
கொழும்பைச் சுற்றிவளைக்க அங்கு வாழும் மக்களின் ஆதரவு அவசியம். கொழும்பு மக்கள் உண்மையை அறிந்து அமைதியாக இருந்ததால் தான் இவர்களால் மீண்டும் கொழும்பை விட்டு வெளியேற முடிந்தது. கொழும்பு மக்கள் கிளர்ந்தெழுந்திருந்தால் போராட்டக்காரர்களால் பேலியகொடைச் சந்தியைத் தாண்டியிருக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.- என்றார்.
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கிண்டலடித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று கணக்காய்வாளரின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை மீது நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது-,
கொழும்பைச் சுற்றிவளைக்க அணிதிரண்டு வருவோம் என்று அறைகூவல் விடுத்தவர்களை நாம் போராளிகள் என்றே கருதினோம். 6ஆம் திகதி சிறையில் இருப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் போராட்ட வீரர்கள் குடித்துக் கூத்தடித்துவிட்டு இறுதியில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். போராளிகள் என்று சூளுரைத்தவர்கள் திருநங்கைகளாகியுள்ளனர்.
அரபு வசந்தம் பற்றிப் பேசிக்கொண்டே வந்தார்கள். இறுதியில் சாராய வசந்தத்துடன் முடித்துக் கொண்டனர். என்மீது பழிசுமத்தப் பல கதைகள் கூறுகின்றனர். கலாவதியான பால் பைக்கற்றுக்களை வழங்கிவிட்டு இப்போது எம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
கொழும்பைச் சுற்றிவளைக்க அங்கு வாழும் மக்களின் ஆதரவு அவசியம். கொழும்பு மக்கள் உண்மையை அறிந்து அமைதியாக இருந்ததால் தான் இவர்களால் மீண்டும் கொழும்பை விட்டு வெளியேற முடிந்தது. கொழும்பு மக்கள் கிளர்ந்தெழுந்திருந்தால் போராட்டக்காரர்களால் பேலியகொடைச் சந்தியைத் தாண்டியிருக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.- என்றார்.
கருத்துகள் இல்லை