பௌத்த மதத்துக்கான முன்னுரிமை மாறாது!
பௌத்த மதத்துக்கே முன்னுரிமை அளிக்க்பபடும். புத்தசாசனத்தைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாகவே உள்ளது.
இவ்வாறு தெரிவித்தார் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சரான நிரோசன் பெரேரா.
நேற்று நாடாளுமன்றில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பௌத்த மதம் தொடர்பில் அரசமைப்பில் உள்ள இரண்டாவது அத்தியாயத்தை உள்ளவாறே பேணுமாறு மக்கள் கருத்தறியும் குழுவில் உள்ள 19 உறுப்பினர்களில் இருவர் மாத்திரமே கருத்துத் தெரிவித்துள்ளனரே என்று உதய கம்மன்பில கேள்வி எழுப்பினார்.
அதற்கு இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா பதிலளித்தார்.
பௌத்த மதத்துக்குரிய முன்னுரிமை தற்போது உள்ளதுபோன்று அப்படியே இருக்கும். அதில் மாற்றம் வராது. ஆனால் ஏனைய மதங்களுக்குரிய உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாப்போம்.
தற்போது பௌத்த மதம் பற்றிப் பேசுபவர்கள் தலதா மாளிகைக்கு அருகில் கார் ரேஸ் நடத்தப்பட்டபோது மௌனம் காத்தமை வருத்தமளிக்கின்றது.
கொழும்பைக் கைப்பற்றுவோம், சுற்றிவளைப்போம் என்று சூளுரைத்தவர்களால் லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தை மாத்திரமே சுற்றிவளைக்க முடிந்தது. அந்தக் கவலையால், தோல்வியால் இப்போது வேறு விடயங்களைப் பற்றிக் கதைக்கின்றனர்.- என்றார்.
இவ்வாறு தெரிவித்தார் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சரான நிரோசன் பெரேரா.
நேற்று நாடாளுமன்றில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பௌத்த மதம் தொடர்பில் அரசமைப்பில் உள்ள இரண்டாவது அத்தியாயத்தை உள்ளவாறே பேணுமாறு மக்கள் கருத்தறியும் குழுவில் உள்ள 19 உறுப்பினர்களில் இருவர் மாத்திரமே கருத்துத் தெரிவித்துள்ளனரே என்று உதய கம்மன்பில கேள்வி எழுப்பினார்.
அதற்கு இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா பதிலளித்தார்.
பௌத்த மதத்துக்குரிய முன்னுரிமை தற்போது உள்ளதுபோன்று அப்படியே இருக்கும். அதில் மாற்றம் வராது. ஆனால் ஏனைய மதங்களுக்குரிய உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாப்போம்.
தற்போது பௌத்த மதம் பற்றிப் பேசுபவர்கள் தலதா மாளிகைக்கு அருகில் கார் ரேஸ் நடத்தப்பட்டபோது மௌனம் காத்தமை வருத்தமளிக்கின்றது.
கொழும்பைக் கைப்பற்றுவோம், சுற்றிவளைப்போம் என்று சூளுரைத்தவர்களால் லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தை மாத்திரமே சுற்றிவளைக்க முடிந்தது. அந்தக் கவலையால், தோல்வியால் இப்போது வேறு விடயங்களைப் பற்றிக் கதைக்கின்றனர்.- என்றார்.
கருத்துகள் இல்லை