'சைக்கோ'வில் இணைந்த நித்யா மேனன்

இயக்குநர் மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் நடிகை நித்யா மேனன் இணைந்துள்ளார்.

தமிழில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த, ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். அதன் பிறகு சூர்யாவின் 24, விக்ரமின் இருமுகன், விஜய்யின் மெர்சல் ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ‘ துப்பறிவாளன்’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் மிஷ்கின் இயக்கவுள்ள திரைப்படத்தின் பெயர் ‘சைக்கோ’ என்று வைக்கப்பட்டுள்ளது. இதில் உதயநிதியுடன் கதாநாயகியாக அதிதி ராவ் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இந்தநிலையில் தற்போது இவர்களுடன் இயக்குநர் ராம் மற்றும் நித்யா மேனன் ஆகியோரும் சைக்கோவில் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீ ராம்.

இளையராஜா இசையமைக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் வெள்ளிக் கிழமை (செப்டம்பர் 7) முதல் ஆரம்பமாகவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.