திகனவில் பரவிய வன்முறைகளுக்கு -பொலிஸாரின் குறைபாடே காரணம்- ரணில்!
கண்டி – திகன பகுதியெங்கும் பரவிய இன வன்முறைகள் பொலிஸாரின் குறை
பாடுகளுக்கான மிகப் பெரும் உதாரணம் எனத் தலைமை அமைச்சர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்தார்.
பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற 152 ஆவது பொலிஸ் தின வைபவத்தில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
சட்டம் ஒழுங்கின் பாதுகாப்பு ஊடாகவே ஓர் உறுதியான நாடு உருவாகும். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் முதன்மையான நிறுவனம் பொலிஸே. அரசு ஒன்றுக்கு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முடியாமல் இருக்குமாயின் அந்த ஆட்சியே ஆட்டம் காணும்.
இங்கிலாந்து நாடே முதன் முதலாக சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, பொலிஸ் துறையை உருவாக்கியது. இன்று உலகின் அனைத்து நாடுகளிலும் பொலிஸ் துறை சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் உள்ளது.
சட்டத்தின் மீதான ஆட்சியை பாதுகாக்க பொலிசாரின் பணி இன்றியமையாதது. சட்டமும் ஒழுங்கும் பாதுகாக்கபப்டும் போதே நாட்டின் உறுதித் தன்மை உருதியாகும். உறுதி அதிகரிக்கும்போதே நாட்டுக்கு முதலீடுகள் வரும்.
எனவே அபிவிருத்தியின் தலைமைப் பங்கு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொலிசாரின் கைகளிலேயே உள்ளது.
இந்த நிலையில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க பொலிசாரும் அதிரடிப் படையினரும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை அரசு வழங்கும். அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்துகொடுப்போம்.
உன்மையில் 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது பொலிசாரின் செயற்பாடுகளில் பெரும் முன்னேற்றம் காணப்படுகின்றது. பொலிஸாரின் சிறந்த நடவடிக்கைக்கு எடுத்துக்காட்டு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஒரு வன்முறையேனும் பதிவாகாமையாகும்.
குறைப்பாடுகளும் உள்ளன. அண்மையில் திகன இன வன்முறைகளுக்கு காரணம் பொலிஸாரின் குறைப்பாடே. அதிலிருந்து நாம் பாடம் கற்று மீளவேண்டும். முகப் புத்தகம் ஊடாகச் சட்டம் ஒழுங்கைக் குலைக்க உள்ள வாய்ப்புக்களை நாம் அறிந்து அந்தச் சவாலை வெற்றிகொள்ளவேண்டும்.
பொலிஸாரின் சம்பள, பதவி உயர்வு பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்.
எனவே பொலிஸாரின் செயற்பாடுகள் சிறப்பாக உள்ள நிலையில், இதனை மேலும் வளர்க்க வேண்டும். அப்போதே சிறந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். என்றார்.
எனவே பொலிஸாரின் செயற்பாடுகள் சிறப்பாக உள்ள நிலையில், இதனை மேலும் வளர்க்க வேண்டும். அப்போதே சிறந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். என்றார்.
கருத்துகள் இல்லை